வாய்திறந்து பேச முற்படும்
வார்த்தைகள் ஓர் வரம்!
வஞ்சனை இல்லா சொற்கள்
வாசமலர் கதம்ப சரம்!
ஏற்றமிகு கருத்துகள்
எண்ணங்களின் வண்ணம்!
களங்கமில்லா சொல்வளம்
கற்பனை தீட்டும் ஓவியம்!
கவனமேற்றினால் தரும்
கருத்துக்களின் பிம்பம்!
வஞ்சனை மிகுந்தாலோ
வசியம் செய்யும் மகுடி!
வாகை கொண்டவர்கள்
வாதங்களின் ஒய்யார படகு!
களங்கமுள்ள நெஞ்சங்களின்
கலகப் பெரும்காரணி!
மௌனம் கொள்கையில்
பன்மடங்கு பலம் பெரும்!
துடுக்காய் இருப்பின்
வம்புகளையும் சேர்த்து விடும்!
அளவாய் பகிர்ந்தால்
அன்பு வளர்க்கும்!
மிதமிஞ்சி போனால்
பதமற்று போகும்!
நாம் பேசும் வார்த்தையால்
நன்மொழி வளரட்டும்!
பண்பொழுக்கம் பெருகட்டும்!
வாகையேற்றோர் வாழ்த்தட்டும்!!
அன்பன்
மகேந்திரன்

1 comment:
I agree that words have the power to inspire and uplift.
Post a Comment