Powered By Blogger

Tuesday 26 April 2011

பணம்!!



ஜனனம் முதல் மரணம் வரை
         தொடரும் ஜாலம்!

மனிதனை பேயெனச் செய்யும்
         மந்திர மார்க்கம்!

பிரிவின் துயரை துச்சமாக்கும்
         துச்சாதன வம்சம்!

சமநிலைவாதியையும் சந்தர்ப்பவாதியாக்கும்
         சாமர்த்தியசாலி!

உண்டெனில் செழுமை
         இல்லையெனில் வறுமை!

இருப்பவரின் அடிநிற்கும்
         இல்லாதவன் முடிபிடிக்கும்! 

உயிரற்ற பொருள்தான்.....  இதை
         உயிரைகொடுத்து பெறவேண்டும்!

இதனிடம் தோற்றவரும் உண்டு
        தோற்கடித்தவரும் உண்டு!

விட்டால் பறக்கும் காற்றில்!
        திரைகடலோடித்தான் பிடிக்கவேண்டும்!

மனிதன் கையில் வந்தால் வாழ்வின்
        கரைகாணச் சொல்லும்!

அவனே சடலமானால் அங்கு வந்து
        சவடால் பேசும்!

கல்வியையும் தன் வாசம்
        கொண்டுவிட்ட!

காலனே இல்லாத! காலமே இல்லாத!
        பணம்!!     



அன்பன்

   ப.மகேந்திரன்

No comments:

Post a Comment