Powered By Blogger

Tuesday 26 April 2011

அன்பு!


கண் இமைக்கும்
      கருவிழிக்கும் போர்!

நானா!......     நீயா!..............
      நீயா!........   நானா!............

நானின்றி நீயில்லை!
      நீயின்றி நானுண்டு!!

காற்றெனும் தூதன் வந்தான்!
      தூசி எனும் துகள் எய்தான்!

கருவிழி விழித்தது!
      செய்வதன்றி தவித்தது!

விரல் சொடுக்கும் நேரத்தில்
      இமை மூடி தடுத்தது!

என் வாழ்வு காத்த இமையே
      நீதான் உயர்ந்தவன்!

நான் வலி கண்டால் விழித்திருப்பாயே
      நீதான் உயர்ந்தவன்!

ஆம்! ......    உண்மைதான்!
      அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்!!                                                                 


அன்பன்

ப.மகேந்திரன்

2 comments:

saran said...

அன்பு தோழருக்கு!
வலைபூ வசந்தமண்டபம் கண்டேன்!
தங்களின் தமிழ் சேவை மேலும் மேலும் பல பரிணாமங்களில் மிளிர்வதை கண்டு உள்ளம் பூரிக்கிறது.
வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
என்றும் உங்களோடு இணைந்து பயணிக்கும்
உங்கள் நண்பன்.
சங்கர்.

மகேந்திரன் said...

அன்புத் தோழர் சங்கர்
தங்களின் இனிய கருத்து கண்டு மனம் மகிழ்ந்தேன்.
தங்களின் பொற்பாதங்களை இங்கு பதித்தமைக்கு
மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
அன்பன்
மகேந்திரன்

Post a Comment