Powered By Blogger
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Thursday, 23 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-6)






ன்புநிறை தோழமைகளே,

னமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை

திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக வைக்க
மனதை சிறுசிறு விளையாட்டுக்களும் வேறு பல சிந்தையூறும்
சிந்தனைகளும் உருவாக்கி அதனை பாதுகாத்திடல் வேண்டும்.
அதற்காக இங்கே ஒரு சொல்விளையாட்டு.  விளையாட்டை
சொல் வடிவில் கொடுக்கும் முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை 
விளையாட்டு. நான் நினைத்த ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய
ஒரு விடுகதைக் கவிதை இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........
 

 


ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் கோர்த்து வைத்த
விலைமதிப்பற்ற சொல்லிது!!
 
ந்தெழுத்தும்
தனித்து நின்றால்
தகதகவென மின்னும்
பொன்னின் பொருள் கொள்ளும்!!
 
முதலெழுத்து திரிந்து
'அ' என மாறி
ஏனைய நான்குடன்
இணைந்து நின்றால்
இருபொருள் தரும்!
ஒன்றோ
வேல்விழிகளுக்கு இடும்
கண்ணிடு மையை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
மேற்குத்திசை யானையின்
பெயரினை
விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
'ச'கர 'அ'கரமாய் மாறியும்!
நான்காம் எழுத்து திரிந்து
'ல'கர 'அ'கரமாய் மாறியும்
ஐந்தெழுத்தாய் நின்றால்
நிலைத்தன்மை இல்லாத
குழம்பிய மனநிலையை
உணர்த்தி நிற்கும்!!
 
 
முதலெழுத்து திரிந்து
'த' கர 'அ' கரமாய் மாறி
இரண்டு மூன்று மற்றும்
கடைஎழுத்துடன்
கூடி நான்கெழுத்து சொல்லாய்
நிற்குமேயானால்
அடைக்கலம் நீயென
புகழிடம் தேடி வரும்!!
 
முதலெழுத்து மட்டும்
தனித்து நின்றால்
அழகு மிகுந்த
சோலை எனவும்
பொருள் தரும்!!
 
னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

Wednesday, 1 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)


ன்புநிறை தோழமைகளே,

வாழ்வில் ஓடும் நிமிடங்களுக்கு பின்னர் நாமும் ஓடி ஓடி
களைத்து திரும்புகையில் ஏதோ ஒரு இளைப்பாறல்
தேவைப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படி ஒன்று தான் 
விளையாட்டு. அந்த விளையாட்டை சொல் வடிவில் கொடுக்கும்
முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை விளையாட்டு. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........



ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் புதைத்து வைத்த
செழுமையான சொல்லிது!!
 
ந்தும் தனித்து நின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ 
உணர்ச்சிகளின் ஒன்றன் 
பெயரை உரைத்து நிற்கும்!!
மற்றொன்றோ 
குற்றமென கண்டவுடன் 
நீதிகோரி 
சாடி நிற்கும்!!
 
முதலெழுத்து மட்டும் 
தனித்து நின்றால்!!
அரண்மனையின்
வெளிப்புறச் சுவரின்
பெயரை கம்பீரமாய்
உரைத்து நிற்கும்!!


மூன்றாம் எழுத்து திரிந்து
"ந" கர "அ" கரமாய்
மாறி நின்று
கடை இரண்டு எழுத்துடன்
கூடி மூன்றெழுத்தாய் நின்றால் 
சிறப்பான திறமை நான் - என 
தம்பட்டம் அடிக்கும்!!  
 
முதலெழுத்து திரிந்து 
"ப" கர  "அ" கரமாய்
மாறி நின்றால்
சத்தியம் தவறினும்
இதைத் தவறாதே - என
பழமொழி விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
"வ" கர "ஆ" காரமாய்
மாறி நின்றால்
என்னிலிருந்து
இசை மழை கொட்டும் - என
இயம்பி நிற்கும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

Wednesday, 11 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-4)






ன்புநிறை தோழமைகளே,

விளையாட்டுக்கள் பலவிதம். அதிலொரு விதம் விடுகதை
விளையாட்டு. விடுகதையை கவிதை வடிவில் கொடுக்கும்
விடுகதைக்கவிதையின் அடுத்த பகுதி இது. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

இதோ விடுகதைக் கவிதை........





ந்தெழுத்தை தன்னுள்
அழகாய் கொண்ட
அற்புதச் சொல்லிது!!

ந்து எழுத்தும்
தனித்து நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
கரிய பெரிய விலங்கினத்தின்
பெயரை உச்சரிக்கும்
மற்றொன்றோ
அழகாய் உயர்ந்து வளரும்
பெயரில் கம்பீரம் கொண்ட
மரம் ஒன்றின் பெயரை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ச" கர "ஊ" காராமாய்
மாறி நின்று
இரண்டு, நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துடன்
இணைந்து நான்கெழுத்து
சொல்லாய் நின்றால்
சிறு கிணறு என்ற
பொருளை உரைத்து நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ப"கர "அ" கரமாய் 
மாறி நின்று
கடைசி மூன்று எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
செய்யும் செயலின்
கேடு விளைவை
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து
"ஆ" என மாறி நின்றால்
ஏக்கம் கலந்த
கவலை உணர்வின்
பெயர் ஒன்றை
கூறி நிற்கும்!!




முதலெழுத்து திரிந்து
"ப" கர "ஓ" காரமாய்
மாறி நின்று
இரண்டு நான்கு மற்றும்
ஐந்தாம் எழுத்துக்களுடன்
கூடி நான்கெழுத்தாய் நின்றால்
இருபொருள் படும்
ஒன்றோ
யானையின் இளங்கன்றின்
பெயரைச் சொல்லும்
மற்றொன்றோ
பிறருக்கு நல்ல அறிவினை
எடுத்துச் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!


இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்


Sunday, 1 January 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-3)


ன்புநிறை தோழமைகளே 
 
அனைவருக்கும் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்று புதிதாய் பிறந்த இப்புத்தாண்டில் எல்லா வளமும் இனிதே
பெற்றிட மனமார வேண்டுகிறேன். 
 
இவ்வாண்டின் முதல் பதிவாக விடுகதைக் கவிதை ஒன்றை
பதிவு செய்கிறேன்.
 
இதோ விடுகதைக் கவிதை,
 

 


ந்தெழுத்தை தன்பால்
அழகாய் கொண்டது!
கணித சூத்திரமல்ல
புனித சூத்திரம்!!
 
ந்தும் தனித்து நின்றால்
சொல்லும் சொல்லின்
எண்ணும் எண்ணத்தின்
திண்மையை உரைத்து நிற்கும்!!

ந்தும் தனித்து நின்று
இடையெழுத்து திரிந்து
"இ" கரமாய் இருப்பது "ஆ" காரமாய்
மாறி நின்றால்
கார்மேகம் கூடி நிற்கும்
இருண்ட மங்கலான சூழலை
சொல்லி நிற்கும்!!!
 
முதலெழுத்து திரிந்து
"த" கர "அ" கரமாய்
மாறி நின்றால்
சூசகமாய் செயலை
கையாளும் முறையினை
பகன்று நிற்கும்!!
 
 




டையெழுத்து திரிந்து
"ச" கர "ஆ" காரமாய்
மாறி நின்று
கடையிரண்டு எழுத்துக்களுடன்
சேர்ந்து நின்றால்
சொல்லப்படும் வாக்கியத்தின்
மையப் பொருளை
கூறி நிற்கும்!!!

 
முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
முப்பொருள் படும்!
ஒன்றோ
வளர்ந்து தேயும்
தவழ் பொருளை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
சீரிய நுட்பமான
நுண்ணறிவை சுட்டும்!
மூன்றாமதோ
பொருட்சொல்லல்ல வினைச்சொல் 
கட்டுப்பாட்டுடன் கண்ணியமாய் 
நடந்துகொள் என உச்சரிக்கும்!!
 
முதல் மூன்றும் 
தனித்து நின்றும்
அதில் முதலெழுத்து திரிந்து
"அ" கரமாய் நின்றால்
நாளொன்றின் பொழுதுகளில்
ஒருபோழுதின்
பெயர் சொல்லும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.



அன்பன்
மகேந்திரன்

Wednesday, 21 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-2 )






அன்புநிறை நண்பர்களே,







விடுகதைக்கவிதையில்
இது என் இரண்டாம் முயற்சி
கீழே இருக்கும் விடுகதைக்கவிதையை படித்து
அதற்கான சொல் எதுவென்று சொல்லுங்கள்.

இதன் கருத்துக்களின் பொருட்டு இந்த
சொல் விளையாட்டின் தொடர்ச்சி....

இதோ விடுகதை கவிதை....


ஐந்தெழுத்து மந்திரமாம்
ஊக்கம் தரும் சூத்திரமாம்!

முதல் எழுத்தும் கடை எழுத்தும்
கூடி நின்றால் 
இரு பொருள்படும் 
ஒன்றோ
அகத்தின் மகிழ்வை
முகத்தில் காட்டும்!
மற்றொன்றோ
அணிவதால் மகிழ்வைக்
கூட்டும்!!

முதலெழுத்து திரிந்து
"த"கர "உ"கரமாய்
மாறி நின்றால்
விலங்கினம் ஒன்றின்
பலமான உறுப்பொன்றை
உரைத்து நிற்கும்!!

கடையெழுத்து
தனித்து நின்றால்
மனித உறுப்பில்
ஒன்றை
விளம்பி நிற்கும்!! 

முதல் இரண்டும்
தனித்து நின்றால்
பல்வேறு குணமிருப்பினும்
ஒன்றிணைத்து
ஒற்றுமையை உணர்த்தும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
ஆண் மகனில்
சிறந்தவன் என
சிறப்பாய் சொல்லும்!!




முதலும் மூன்றும்
தனித்து நின்றால்
மாதமொன்றின்
இறையவனை
இயம்பி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!

இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்

Saturday, 17 December 2011

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே??!!!




தனிமை ஒரு தவம் போன்றது. உணர்வுகள் போராட்டம் நடத்தும் வாழ்வில்
தனிமை தனக்கிட்ட பணியை செவ்வனே செய்கிறது. இருக்கின்ற மனநிலையைப்
பொறுத்து தனிமை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் சிலசமயம் குரூரமாகவும்
பல சமயங்களில் சீர்மிகு சிந்தனையாகவும். இப்படி நான் விடப்பட்ட ஒரு தனிமை
வேளையில் என் மனதுக்குள் உதித்த எண்ணம் தான் இது.

நம் தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒரு சொல்லை எடுத்து
ஒரு விடுகதை போட்டால் என்ன என்ற எண்ணம் தான் அது..

முயற்சிக்கிறேன்....

இதோ பாடல் வடிவில் ஒரு விடுகதை. முடிவில் இங்கு விடுகதைக்காக எடுக்கப்பட்ட
சொல்லை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.





ஐந்தெழுத்தை அழகாய் 
தன்னுள் பதித்த 
கைதவழ் பொருளின் 
அழகிய சொல்லே!!

முதலெழுத்தின்
"ஆ"காரம் "அ"கரமாக
மாறிநின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ ஆவணமாய்
சட்டம் பேசும்!
மற்றொன்றோ
தட்டி எழுப்பி  
விழித்துக்கொள்ளச் செய்யும்!! 

முதலெழுத்து திரிந்து
"ச"கர "ஊ"காரமாய் 
மாறிநின்றால் 
நான் இல்லையேல் 
கணிதமில்லை என 
விளம்பி நிற்கும்!!

முதலெழுத்து திரிந்து 
"ச"கர "ஆ"காரமாய் 
மாறிநின்றால் 
சகல் கலைகளும்  
என் கட்டுக்குள் தானென 
ஆணவம் பேசும்!!

முதலெழுத்து திரிந்து
"ம"கர "இ"கரமாயும்
கடையெழுத்து திரிந்து 
"ன"கரமாயும் மாறி
அதே ஐந்தெழுத்தாய்
உருமாறி நின்றால்
நம்பிக்கைக்கு உரியவராயும்
உற்ற நேரத்தில்
தோள் கொடுப்பவராயும்  
மிளிர்ந்து நிற்கும்!!




முதலும் கடையிரண்டும்
கூடிநின்றால் 
தாளாத அதிகப்படியான
பொருள் அளவை
முன்மொழிந்து நிற்கும்!!

முதல் மூன்றும்
தனித்து நின்றால்
விதைப்பதற்காய்
உழவன் அமைத்த
வடிவை அழகாக
சொல்லி நிற்கும்!!

எனதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


இதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
இன்று மாலை வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.

அன்பன்
மகேந்திரன்