Powered By Blogger

Monday 12 November 2012

முக்கோணப் பெட்டகம்!!







தாரப் புள்ளியினின்று
ஆகிருதியாய் வந்த 
ஒற்றை வெள்ளைக் கற்றையை 
உள்வாங்கிக் கொண்டாயோ?!!
 
ன்ன மாயம் செய்தாய்?!
என் விழிப் பார்வையின் 
காட்சிப் பிழைதானோ?!
இல்லை இல்லை
உண்மைதான் போலும்!
நான் தான்
கனவுலகில் இல்லையே!!
 
வெண்ணிறக் கற்றையை
உட்புறம் ஏற்ற நீ
வெளிவிடுகையில்
வண்ணங்கள் மாற்றினாய்!!
 

 


திசயம் என நான்
எண்ணியிருக்கும் வேளையிலே
அதிசயம் ஏதுமில்லை
ஒளிவிலகல் எனும் பண்பை
உனக்காக விவரித்தேன் என
உன்பெருமை வாசித்தாய்!!
 
னக்கு முன்னே
ஒரு சவால் இருக்கையில்
அதற்கான ஒருதீர்வு
உன்னகத்தில் கொள்ளாது
சிந்தனையை தூண்டிவிட்டு
பல்வேறு தீர்வுகளை
பாங்காக எடுத்திடென
பக்குவமாய் உரைத்திட்டாய்!!
 
முப்பரிமானம் காட்டும்
முக்கோணப் பெட்டகமே!
வண்ண நிறம் காட்டும்
வாஞ்சைமிகு பெட்டகமே!
நிச்சமாய் சொல்கிறேன்
நீ எனக்கு ஆசானே!!
 


அன்பன்
மகேந்திரன்

32 comments:

எம்.ஞானசேகரன் said...

அருமையான அறிவியல் கவிதை நண்பரே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அறிவியல் கருத்தை அருமையான கவிதை ஆக்கி விட்டீர்களே!அற்புதம் மகேந்திரன்

இராஜராஜேஸ்வரி said...

வெண்ணிறக் கற்றையை
உட்புறம் ஏற்ற நீ
வெளிவிடுகையில்
வண்ணங்கள் மாற்றினாய்!!

வண்ணமிகு சிந்தனைக்கு
வளமான வாழ்த்துகள் !!

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

முத்தரசு said...

அருமை..


இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்

பால கணேஷ் said...

விஞ்ஞானத்தையும் கவிதையாய் சொல்ல முடியும் என்ற வியப்புக்குரிய விஷயத்தின் நாயக்ன் நீங்கள்தான் மகேன். உண்மையில் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் கற்க ஏதாவதொன்று இருக்கத்தானே செய்கிறது. அருமையாய கவி பாடிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ராஜி said...

தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா!

சசிகலா said...

வித்தியாசமான வரிகளால் வியக்கவைத்து விட்டீர்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.
அண்ணி குழந்தைகளுக்கும் கூறவும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய கோணம் புதிய சிந்தனை...

இந்த உலகில் இருக்கும் அனைத்தும் நமக்கு ஆசான்களே...

நல்லது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

kowsy said...

படம் பார்த்துக் கவிதை வடித்தீர்கள். கருவுக்குள் விஞ்ஞானம் கலந்தீர்கள் . இப்படியும் கவி வடிக்கலாம் என உணர்த்தினீர்கள் . முக்கோணப் பெட்டகத்தில் முழு அறிவு பெற்றீர்கள் . வாழ்த்துகள் .தீபாவளி வாழ்த்துகள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கவிப்பிரியன்,
தங்களின் முதல் வருகைக்கும் இனிய கருத்துக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் முரளிதரன்,
கவிகண்டு சிலாகித்த கருத்துக்கு
என் மனமார்ந்த நன்றிகள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி இராஜராஜேஸ்வரி,
தங்களின் அழகான கருத்துக்கு என் நன்றிகளும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்களும்.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கோவை முத்தரசு,
தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் கணேஷ்,
உண்மை உண்மை..
நாம் காணும் பொருள் அனைத்தும் நமக்கு
ஒவ்வொரு வகையில் பாடல் சொல்கின்றன...
தங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் அழகிய கருத்துக்கு நன்றிகள் பல...
தங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புத் தங்கை ராஜி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புத் தங்கை சசிகலா,
சிலாகித்த கருத்துக்கு நன்றிகளும்..
இனிய தீபாவளி வாழ்த்துக்களும்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் சௌந்தர்,
தங்களின் அழகிய கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளும்..
இனிய தீபாவளி வாழ்த்துக்களும்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரர் ரெவெரி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி சந்திரகெளரி,
தங்களின் அழகிய கருத்துக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளும்..
இனிய தீபாவளி வாழ்த்துக்களும்...

Yaathoramani.blogspot.com said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......

மனோ சாமிநாதன் said...

வானவில்லை ஆசானாக் கொன்ட‌அருமையான கவிதை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

அருணா செல்வம் said...

கருப்பான விழிகளால் தான்
கலரான உலகத்தைக் காண்கிறோம்...
கவிதை அருமை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

அன்புநிறை ரமணி ஐயா,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை சகோதரி அம்பாளடியாள்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை மனோ அம்மா,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் அருணா செல்வம்,
தங்களின் அழகிய கருத்துக்கு நன்றிகள் பல...
தங்களுக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Seeni said...

சொந்தமே...
படமும்!

வரியும்!

மயக்குது.....

Post a Comment