Powered By Blogger

Sunday 8 May 2011

தூளியிடு! தோழா!



தூளியிடு! தோழா!
தூளியிடு!
துயிலா துர்குணங்களை!
தூக்கியது போதும்!
துண்டு துண்டாக்கி!
தூளியிடு!


சொன்ன பேச்சு கேட்காமல்!
சோறு மட்டும் தின்றுவிட்டு!
சோளக்கொல்லை- பொம்மையென
சோடித்து உன்னை வைத்த
சோம்பலை நீ - தூளியிடு!


முன்னேற்றத்தை
முண்டியிட்டு தடுத்து
மூலையில் உன்னை
முடக்கிப்போடும் - உன்
முயலாமையை நீ - தூளியிடு!


பொங்கி வரும் வெள்ளமாய்
பொத்தி வச்ச வெல்லமான
பொன்போன்ற வாழ்வை
பொசுக்கிப்போடும் - உன்
பொறாமையை நீ - தூளியிடு!


தங்கத் தோழா! உன்
தடையில்லா ஓட்டத்திற்கு
தடா சட்டம் போட்டு
தவிடுபொடியாக்கும் - உன்
தாழ்வுமனப்பான்மையை நீ- தூளியிடு


திண்ணிய தோள் நிமிர்த்து!
திரவியமாம் உன் அறிவை
திசை எட்டும் பரப்பு!
தளர்ச்சி வேண்டாம் - உன்
தயக்கத்தை நீ - தூளியிடு!


எண்ணிப்பார் தோழா!
ஏராளம் உன்னிடம்
ஏற்றமிகு நண்பனே!
ஏக்கம் கொள்ளாதே!
ஏனைய உன் துர்குணங்களை
இப்போதே நீ - தூளியிடு!


வீறு கொள் சிங்கமே!
வீழ்ந்துவிடாதே - இந்த
வீணாய்ப்போன குணங்களிடம்!
விட்டிப்பிடிக்காதே
விரட்டி விரட்டி ஓடவிடு!


தூக்கத்தில் துவளட்டும் - உன்
துர்குணமெல்லாம்
வீசி வீசி தூளியாட்டு!
விழித்துக்கொள் நண்பா!
அவையெல்லாம்
தூளியிலே தூங்கியபின்!!!


நம்பிக்கை துணை கொள்!
முயற்சியை கைவிடாதே!
முன்னேறிச்செல்!
துர்குணங்கள் வரும்போது
தூளியிட்டு ஆட்டிவிடு!!!!!



அன்பன்

ப.மகேந்திரன்

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//சொன்ன பேச்சு கேட்காமல்!
சோறு மட்டும் தின்றுவிட்டு!
சோளக்கொல்லை- பொம்மையென
சோடித்து உன்னை வைத்த
சோம்பலை நீ - தூளியிடு!
//

அற்புதமான சாட்டையடி மகேந்திரன்...
வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

தங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

Post a Comment