Powered By Blogger

Sunday, 21 September 2014

பிறந்தநாள் பரிசு!!


டந்த ஓராண்டு காலமாக இணையப்பக்கம் வருவதற்கு காலம் ஒத்துழைக்காததால் பதிவுகள் இடவில்லை என்றாலும். என்னையும் என் எழுத்துக்களையும் அங்கீகரித்து கிடைத்த பரிசு. அதுவும் இன்றைய வலைப்பதிவர்களில் நவீன ஒளவையாக நான் போற்றும் சீர்மிகு எழுத்தாளர் திருமதி.வேதா இலங்காதிலகம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதினை பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மனம் குதூகலிக்கிறது.
எனது பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் இந்த விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தீந்தமிழ் சொற்களால் 
      பூந்தளிர் கவிபடைக்கும் 
செந்தமிழ் நாயகியே! - உம் 
      மாந்தளிர் கரங்களால் 
ஈந்த இப்பெரும் விருது 
      சேர்ந்தது என் நெஞ்சினிலே!!

மதிப்பிற்குரிய வேதாம்மா என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகளுடன் பெற்றுக்கொள்கிறேன் விருதினை மட்டற்ற மகிழ்ச்சியோடு.

1) விருதினை என்னுடன் பகிர்ந்த வலைப்பதிவரின் தளமுகவரி...

சிலபத்து அடிகளில் 
        சிறுகாவியம் படைத்திடும் 
சீர்மிகு எழுத்தாளர் 
        சிறப்பான கவியாளர்!!

ன்றே முக்கால் அடியால் 
        ஓங்கி ஒலித்திட்டார் வள்ளுவர் அன்றே!
ஒன்றிரண்டு கூட்டி 
        ஓவியம் படைத்திட்டார் வேதாம்மா இன்றே!!

கவின்மிகு சொற்களால் காவியம் படைக்கும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் வலைத்தளத்தை  இங்கே காணுங்கள்.

2) என்னைப் பற்றி ...

நான்மாடக் கூடலே 
      நான் பிறந்த ஊராம்!
நாட்கள் கரைசேர்த்ததோ 
      திருமந்திர நகராம்!

ணியின் நிமித்தமாய் 
      அமீரகம் நுழைந்து 
அங்குமிங்கும் பறந்தோடும் 
      விக்கிரமாதித்தன் நானே!

தாய் தந்த மொழியினுக்கு 
      அணில் போல தொண்டாற்றிட 
விரல்வழி ஊறும் எழுத்துக்களை 
       தூரிகையில் சமைக்கிறேன்!

நாட்டுப்புறக் கலைகளை 
       நயமாய்ச் சொல்லிடவே 
நாள்தோறும் எத்தனிக்கிறேன் 
       காலம் கைகூடட்டும்!!

3) எனக்குக் கிடைத்த விருதினை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பதிவர்கள்....


என்னைத் தொடரும் அனைத்து பதிவர்களுடனும், இனி தொடரவிருக்கும் புதிய பதிவர்களுடனும் இந்த விருதினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..


இன்னொருபுறம் என் பிறந்தநாள் பரிசாக தனி பதிவே இயற்றி இருக்கிறார் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் தனிமரம் நேசன் அவர்கள். உங்களின் அன்பிற்கு என்றென்றும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே. பதிவினை இங்கே காணுங்கள்.


அன்பன் 
மகேந்திரன் 

Tuesday, 16 September 2014

வேய்கூரை தார்மீகம்!!!







கூக்குரல் கேட்டது

கூப்பிடும் தூரத்தில் 
கூர்செவி மடுத்தேன் - ஆங்கே 
கூர்மதி உறைந்தேன்!!


திலியாய் நிற்கும் 
எவனோ ஒருவனின் 
ஏக்கப் பெருமூச்சு - கணையாய் 
எட்டியது செவியில்!!
 
 

 


 
னிந்த சோதனை 
எனக்கு மட்டும் வேதனை 
ஏனையோர் அனைவரும் - எனை 
ஏற்றுப்பார்க்கும் வேளையில்!!


ல்லாய் போனாயோ 
கடவுளும் நீ தானோ 
காற்றுக்கும் கேட்குமே - என் 
கதறலின் செவ்வொலி!!
 
 
 
 
ற்றே நிலை மறந்தேன் 
சாய்ந்து அமர்ந்துவிட்டேன் 
சன்னமான ஒலியதில் - நானோ 
சமைந்து சிலையாய் போனேன்!!


புத்திக்கு விளங்கவில்லை 
புரியாத ஒலிக்கூவல் 
புரிந்திட விழைகையில் - சிறு 
புன்னகை தருவித்தேன்!!
 
 
 
 
சுற்றிவரும் ஆதவனும் 
சுழலுகின்ற பூமியும் 
சூழ்ந்துள்ள காற்றும் - எதுவும் 
சூதுபேதம் பார்ப்பதுண்டோ?!!


னக்கிருக்கும் இந்தநிலை 
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை 
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி 
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!
 
 
 
 
யல்பான வாழ்வதனில் 
இருள்சூழும் வேளைதனில்
இருதலைக்கொள்ளி ஆனோர் சிலர் 
இரும்பிதயம் கொண்டோர் பலர்!!


னக்கென்று வரும்போது 
தார்மீகம் படைத்திடுவார் 
தாளாத துன்பத்திலும் - இயல்பாய் 
தரணியில் வாழ்ந்திடுவார்!!
 
 
 
 
சுண்ணமிட்ட புழுவா நீ 
சுயநிலை ஏன் மறந்தாய்?!
சுன்னநிலை அடைவதற்குள் - அதற்கு 
சூத்திரம் கற்றுக்கொள்!!


வெந்து சாகிறேன் என 
வெறும்பேச்சு தனைவிடுத்து 
வெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான 
வேய்கூரை அமைத்துக்கொள்!! 



அன்பன் 
மகேந்திரன்
 

Monday, 3 February 2014

தன்னிறைவே தகைவாய்!!!








ருயிர் ஒன்றிணைந்து 
ஓருயிர் ஈன்றதம்மா!
கருவினின்று வந்தபின்னே 
சருகாகி உதிரும்வரை 
பொருள் பல விளங்குதம்மா!!

ய்ந்த நிமிடங்களின் 
மாய்ந்த பொழுதுகளில்!
தோய்ந்து உறவாடி
சாய்ந்திட எண்ணுகையில்  
பாய்ந்து ஓடுதம்மா!!






முளைத்து வளர்ந்து
கிளைத்து ஓங்கியபின்!
விளைந்த உணர்வுகளால் 
சளைத்த நெஞ்சமது  
களைத்துப் போனதம்மா!!


கழிகள் பலகடந்து 
நிகழின் நிலைதனில் 
புகழின் உச்சியிலே 
நெகிழ்வாய் இருப்பினும் 
மகிழ்விங்கு இல்லையம்மா!!





ரங்களைத் தருவித்து 
நிரந்தர நிலைதனை 
உரமிட்டு வளர்த்தும்!
சுரமற்று நிற்கும் - நான் 
மரப்பாச்சி பொம்மைதானோ?!!


றைகளாய் நெஞ்சத்துள் 
உறைந்து காய்ந்துபோன 
குறைகளைக் களைந்தும் 
சிறையுண்ட மனம்விடுத்து  
நிறைவு காண்பது எப்போது?!!




ப்போது இயற்றும் 
தப்பாத செயல்களிலா?
முப்பொழுதும் கொண்ட 
ஒப்பில்லா ஒழுக்கத்திலா?
எப்போது உறையும் தன்னிறைவு?!!


தறாது உதிர்க்கும் 
உதறாத சொற்களிலா?
சிதறாது சேர்க்கும் 
இதரபிற பொருட்களிலா?
எதனால் கிட்டும் தன்னிறைவு?!!


ங்கத உறவுகளுடன் 
சங்கமித்து இருக்கையிலா?
பொங்கிய துயரங்களை 
தங்கிடாது அழிக்கையிலா?
எங்கனம் விளையும் தன்னிறைவு?!!


போதுமென்று எண்ணி 
சாதுவாகி அமர்கையிலா?
ஏதுசெய்து கிடைத்தாலும் 
பொதுவினில் வைக்கையிலா?
எதுவீனும் தன்னிறைவு?!!


ண்ணிமைக்கும் பொழுதினிலே 
மண்கூட இடம் மாறும்!
பொன்னான இப்புவியில்  
இன்வாழ்வு நிலைத்திட 
தன்னிறைவே தகைவாய்!!



அன்பன் 
மகேந்திரன் 

Monday, 9 December 2013

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2





கட்டியங்காரன் அறிமுகம் !!!


க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......





லால தோப்புக்குள்ளே 
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய 
பணிந்துவந்தேன் - ஐயா 
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


ட்டிளம் காளையிவன் 
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா 
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




ண்போன்ற காவியத்தை 
கதையாக்கி நடிக்கும்போது    
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


கோடிட்ட இடங்களிலே 
கோமகனாய் வாழ்ந்துவந்தேன் 
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா 
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




வைக்கோலால் செய்யப்பட்ட 
குடைபோல விரிந்திருக்கும் 
உடைகளில் நான் வருகையிலே - ஆமா 
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


தையில் வரும் நாயகர்கள் 
கதைப்பாட்டு மறக்கையிலே 
அதையெடுத்து நான் பாடி - அழகா 
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


==== தெருக்கூத்து தொடரும் 







அன்பன் 
மகேந்திரன்