Powered By Blogger

Thursday, 23 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-6)






ன்புநிறை தோழமைகளே,

னமே ஒரு மந்திரச்சாவி என்பார்கள். அப்படி நம் எண்ணங்களை

திறக்க உதவும் அந்த மந்திரச்சாவியை மிகவும் பத்திரமாக வைக்க
மனதை சிறுசிறு விளையாட்டுக்களும் வேறு பல சிந்தையூறும்
சிந்தனைகளும் உருவாக்கி அதனை பாதுகாத்திடல் வேண்டும்.
அதற்காக இங்கே ஒரு சொல்விளையாட்டு.  விளையாட்டை
சொல் வடிவில் கொடுக்கும் முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை 
விளையாட்டு. நான் நினைத்த ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய
ஒரு விடுகதைக் கவிதை இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........
 

 


ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் கோர்த்து வைத்த
விலைமதிப்பற்ற சொல்லிது!!
 
ந்தெழுத்தும்
தனித்து நின்றால்
தகதகவென மின்னும்
பொன்னின் பொருள் கொள்ளும்!!
 
முதலெழுத்து திரிந்து
'அ' என மாறி
ஏனைய நான்குடன்
இணைந்து நின்றால்
இருபொருள் தரும்!
ஒன்றோ
வேல்விழிகளுக்கு இடும்
கண்ணிடு மையை
உணர்த்தி நிற்கும்!
மற்றொன்றோ
மேற்குத்திசை யானையின்
பெயரினை
விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
'ச'கர 'அ'கரமாய் மாறியும்!
நான்காம் எழுத்து திரிந்து
'ல'கர 'அ'கரமாய் மாறியும்
ஐந்தெழுத்தாய் நின்றால்
நிலைத்தன்மை இல்லாத
குழம்பிய மனநிலையை
உணர்த்தி நிற்கும்!!
 
 
முதலெழுத்து திரிந்து
'த' கர 'அ' கரமாய் மாறி
இரண்டு மூன்று மற்றும்
கடைஎழுத்துடன்
கூடி நான்கெழுத்து சொல்லாய்
நிற்குமேயானால்
அடைக்கலம் நீயென
புகழிடம் தேடி வரும்!!
 
முதலெழுத்து மட்டும்
தனித்து நின்றால்
அழகு மிகுந்த
சோலை எனவும்
பொருள் தரும்!!
 
னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்

Saturday, 18 February 2012

பருவநிலைகள் ஏழு!!!


கன்ற புவியின்
அங்குலம் தோறும்
அவதானிக்கும் மனிதர்களின்!
அடையாளச் சின்னமாய்
அகத்தினை தருவிக்கும்
அழகான மொழியழகே!!!
 
ழலையின் மொழிமுதல்
மங்காத ஒளிவிளக்காய்
மாதாவின் இதழினின்று!
மரிக்கொழுந்து வாசமாய்
மனதினை ஆட்கொண்ட
மதுரத் தமிழழகே!!


கட்டு மொழி பேசாது
பண்பாடு இதுவென
பக்குவ மொழியாலே!
பச்சிளம் பருவத்திலே 
பதியம் போட்டுவைத்த 
பார்போற்றும் தமிழழகே!! 
 
காண்மின்! காண்மின்! என
கலிங்கத்துப் பரணியை
களிப்போடு எனக்குரைத்து!
கலியுலக வேந்தன் நீயென
கவிமகுடம் சூட்டிய
கற்கண்டுத் தமிழழகே!!
 
டைதிறந்த வெள்ளம்போல்
மாமணியே உன்னுள்ளே  
மடங்காய் பெருகிநிற்கும்
மந்தகாச பொருளுணர்வை
மௌனித்து காண்கையிலே
மதகுடைத்த நீரானேன்!!


பெரும்பறை முழக்கி
பெட்டகச் சொற்களால்
பெண்ணின் பருவங்கள் ஏழென!
பெருமையோடு நீ கூறுகையில்
பெண்ணிற்கு மட்டுமா பருவங்கள்? - நீ
பெற்ற ஆணிற்கு இல்லையா - என
பொறையொடு  வினா தொடுத்தேன்!!
 
ருவில் உதித்தவனே - என்
உருவைச் சுமந்தவனே
பொறுமையை சிரம்கொள்!
பருவங்கள்  உனக்குமுண்டு
செருக்கை ஒழித்துவிட்டு
பொருண்மையை விளம்புகிறேன்
அருகிருந்து கேட்டிடுவாய்!!


கைதவழ் பருவந்தொட்டு
ஏழாண்டு தொடும் வரை!
மனம் மயக்கும் மழலை
பருவமதை அழகாய்
பாலன் என விளம்பிடுக!!


செய்யும் செயலுக்கும்
பார்க்கும் பொருளுக்கும்
விளக்கம் கேட்க துடிக்கும்
ஏழாண்டு முதல் பத்தாண்டு வரை
பொருள் தேடும் பருவத்தை
மீளி என சொல்லிடுக!!


நான் என்ன குழந்தையா?
எனக்கேன் இந்த விளக்கமென
அறியாததை அறிந்தது போல்
புறத்தில் அகம்காட்ட மறுக்கும்  
பத்து முதல் பதினான்கு வரை
விகற்ப உணர்வுகள்
மேலோங்கிய பருவத்தை
மறவோன் என இயம்பிடுக!!


ரும்பு மீசை முளைக்க
அலைபாயும் உள்ளமதை
அள்ளித்தெளித்த நட்சத்திரங்களாய்
அங்குமிங்கும் பரவவிடும்
பதினான்கு முதல் பதினாறு வரை
பரியேறி பார்வலம் வந்திடும்
பாங்கான பருவத்தை
திறலோன் என சொல்லிடுக!!


ணின் பருவங்களில்
ஆபத்து நிறைந்த
ஆட்கொல்லிப் பருவமிது!
பதினாறு என்பதில்
பகட்டுத் தோற்றம்
புனையச் சொல்லும்!
பதினாறின் சாகசங்களை
சான்றுகள் இல்லாது
சவமாய் ஆக்கிவிட்டு
சரித்திரம் ஏற வைக்கும்
சாரல்மழைப் பருவமிதை
காளை என பகன்றிடுக!!


யிற்றின் பகுதியில்
ஆறு மடிப்புக்காய்
எத்தனிக்கும் முயற்சி முதல்
வாழ்வின் பொருளுணர்வுகளை
உணரத் துடித்து
பணமும் குணமும்
ஒருசேர வேண்டுமென
முடிவுக்காய் வந்துவிடும்
மூப்பின் ஆரம்பம் முப்பது வரை
விடலை என விளம்பிடுக!!


ந்ததிகளின் வாழ்வொன்றே
சாத்திரம் எனக்கொண்டு
பாத்திரம் நிரப்புவதே
தலையாய கடமையாய்
வாழ்வின் நீரோட்டப் பாதையில்
பயணத்தை ஆரம்பிக்கும்
முப்பதிற்குப் பின்வரும்  
மூப்பிற்காம் ஆரம்ப நிலையை
முதுமகன் என உரைத்திடுக!!


தேனான தீந்தமிழே
பூத்துவந்த பூந்தமிழே!
விளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ
விளம்பிட செவியுற்றேன்!
விரிந்திருக்கும் இப்புவியில்
தமிழே உனை என்
நாவினின்று வெளிப்படுத்த
என்ன புண்ணியம் செய்தேனோ!!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday, 17 February 2012

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)


லையுலகின்  வீசுதென்றலாய் கவிதைகளில் தென்றலின்
இன்பத்தை சுவைக்க வைக்கும் என் அன்புத் தங்கை சசிகலா
அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கினங்க இந்தப் பதிவு.. 

சொந்த ஊர் என்று சொல்லும்போதே கொஞ்சம் புன்னகையும்
இதழோரம் கலந்துவிடுவது இயல்பான செயல். நம்ம பிறந்த
ஊரைப்பற்றி சொல்லணும் என்றால் சொல்லிக்கிட்டே இருக்கலாம்..
 
ர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும்.
வாங்க.. வாங்க.. உட்கார்ந்து பேசுவோம் எங்க ஊரு பெருமை பற்றி.
 
தென் தமிழகத்தின் வரலாற்றில் நிலைபெற்ற சின்னமாய் விளங்கும்
தூத்துக்குடி என் ஊர். இதற்கான பல பெயர்க்காரணம் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று அன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்
வருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும்
பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...
 
தூத்துக்குடி நகர் ஒரு வளர்ந்த கிராமம் போல.. நகரின் மையப்பகுதியில் இருந்து
பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு அப்புறம் மேற்கு நோக்கி சென்றாலோ அல்லது
தெற்கு நோக்கி சென்றாலோ பசுமையாய் இருக்கும்.
 
 
 
நாட்டின் பெரும்பாலானோர் உணவில் பயன்படுத்தும் உப்பில் ஒரு கல் உப்பாவது
எங்க ஊரு உப்பாக இருக்கும். பரந்த பாரத நாட்டின் உப்பு உற்பத்தியில்
இரண்டாம் இடம் வகிக்கிறது எங்க ஊர். அது தவிர பல முக்கியமான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 
ங்க ஊர் கடலோரம் அமைந்த தான்தோன்றி பனிமய மாதா திருக்கோவில்
மிகவும் புகழ் வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5 ம் நாள் இங்கே
கோலாகலத் திருவிழா நடக்கும்.
 
எங்க ஊர் பேச்சு வழக்கை இங்கே கொஞ்சம்
சொல்ல முயற்சிக்கிறேன்...
 
ம்லே ஏகாம்பரம்
இங்கிட்டு எங்க வந்தே?
அண்ணாச்சி
நல்லா இருக்கீகளா?
நான் சும்மா அப்படியே
ஊர சுத்தி பாத்திட்டு
எல்லாரும் நல்லா இருக்கீகளா னு
பாத்துட்டு அப்படியே
அங்கிட்டு கூடி
திருச்செந்தூரு போகலாம் னு வந்தேன்..
 
ஏலேய்
நல்லா ஏசிப்புடுவேன் பாத்துக்கோ
இந்தாள இங்க வர வந்துபுட்டு
வீட்டுக்கு வராம போனீன்னா
அப்பறம் நல்லா இருக்காது
சொல்லிபுட்டேன்...
 
இப்படி ஏழு ஸ்வரங்களுடன் எட்டாவது ஸ்வரமாய் எங்க ஊரு தமிழை
சேர்க்கலாம்..அவ்வளவு எழில்மிகு சிறப்பு.
=========================================================================
 
இந்தப் பதிவை தொடர்வதற்காக நான் அழைக்கும் என் சொந்தங்கள்..
 
திவுலகில் என் தோள்குலுக்கி உறவுமுறையோடு அருமையாய் பழகும்
அருமை காட்டான்  மாமா... இவரின் எழுத்து நடைக்காகவே இவர் பதிவுகளை
பார்க்க விரும்புகிறேன்.
 
டிக்க ஆரம்பிக்கையில் கமல மொட்டுக்களாய் துவங்கும் இவரின் பதிவுகள்
படித்து முடிக்கையில் மலர்ந்து செந்தாமரையை மனம் வீசும் எழுத்துக்குச்
சொந்தக்காரர் அன்பு சகோதரி கீதமஞ்சரி.
 
கோவை மாநகரின் இதமான ஈரக்காற்று போல இவர் பதிவுகளிலும்
இதமும் பதமும் இனிமையுற நூற்றுக்கொடுக்கும்
கோவையின் கொன்றைவேந்தன் என் அருமை நண்பர் ரமேஷ் வெங்கடபதி
 
மிழின் சுவையை தான் எழுதிய பக்தி பாமாலைகளால் என் மனதை கொள்ளை கொண்டு மனதில் நீங்கா இடம் பிடித்த ஐயா தமிழ்விரும்பி ஆலாசியம் அவர்கள்.
 
 
அன்பன்
மகேந்திரன்

Sunday, 12 February 2012

களிப்பான கழியாட்டம்!!!







போதக முகத்தோனே
பேரன்னை புதல்வோனே!
ஏரம்ப நாயகனே
கோட்டுமலை பெரியோனே!
கோலாட்டம் ஆடவந்தேன்
களம் வந்து காத்திடய்யா!!
 
ந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
தந்தகித்தோம் தரிகிடத்தோம்
தத்தித்தோம் தரிகிடத்தோம்!
 
 
லேலோ ஆட்டமாடி
ஏலேலந்தம் பாடிவந்தேன்!
எழிலான  ஏழுதேசம் 
இறங்கி நானும் ஓடிவந்தேன்!!
 
ருமனை அங்காளம்மா
அழகாக பெத்தபுள்ள!
கடம்பங் குச்செடுத்து 
கழியாட்டம் ஆடவந்தேன்!!
 
 
கைக்கொரு கழிகொண்டு
எதிராக சோடிபோட்டு!
நாட்டாரு கலையிதையே
நயமாக ஆடவந்தேன்!!
 
காணிக்காரன் என்றுசொல்லும்
ஆதியினம் நானப்பா!
மூட்டுக்காணி தலைமையிலே
மந்தையிலே ஆடவந்தேன்!!
 
 
சீதவெற்றம் குச்செடுத்து
சிங்கார உடையுடனே!
மைலாடி மைனர் நான்
மையலாக ஆடவந்தேன்!!
 
கொரண்டிக் கழிகொண்டு
தட்டித்தட்டி ஆடயிலே!
கருப்பன் சலங்கை போல
கலகலன்னு ஒலிக்குதய்யா!!
 
 
மாடனுக்கும் இசக்கிக்கும்
வரலாறு சொல்லிவந்தோம்!
வக்கனையா பாட்டெடுத்து
வரிசை போட்டு ஆடிவந்தோம்!!
 
ழிலைக் கிழங்கை நல்லா
பக்குவமா கிளர்ந்தெடுத்து!
பாபநாசம் உச்சியிலே
பாங்காக வாசம் செய்தோம்!!
 
தாழக்குடி ஆசானவர்
தலையேத்தி தந்தபாடம்!
கணுக்கால் சதிராட
அடவுகட்டி ஆடிவந்தேன்!!
 
 
டும்பின் தோலெடுத்து
உலர்ந்து போனபின்னே!
சுட்டெடுத்த மண்பானை
வாயில்தான் கட்டிவச்சோம்!!
 
ட்டிவச்ச பானையத
உடுக்கக்கட்டை என்போம்!
அதில் வந்த இசையோடு
அழகாக ஆடிவந்தோம்!!
 
ருகையில் கழிஎடுத்து
மறுகையில் துணிய கட்டி!
வட்டமிட்டு ஆடிவந்த
ஒத்தைக்கழி கோலாட்டம்!!
 
 
கைக்கொரு கழிஎடுத்து
முன்நெற்றி மண்பார்க்க! 
வளைஞ்சு ஆடிவந்த
இரட்டக்கழி கோலாட்டம்!!
 
த்தரம் ஒன்னு செஞ்சு
பலவண்ண துணிகள் கட்டி!
வலக்கையில் கழிஎடுத்து
இடக்கையில் துணி பிடித்தோம்!
 
 
ட்டமாக கூடிநின்னு
வந்த இசைக்கேற்ப!
கோலாட்டம் அடிக்கையிலே
துணிகளில் பின்னல் விழும்!!
 
டிவந்த திசைக்கிப்போ
எதிராக அடுத்தகுழு!
நேரெதிரா ஆடயிலே
விழுந்த பின்னல் அவிழ்ந்துவிடும்!!
 
ழகான இந்த ஆட்டம்
கவர்ந்திழுக்கும் ஆட்டமய்யா!
இதற்கான பெயரதுவே
பின்னல் கோலாட்டம் என்பார்!! 
 

தாண்டியா என்பதெல்லாம்
தானாக வந்ததல்ல!
எம்கலைய பார்த்துதானே
தருவித்த கலையப்பா!!
 
காலுக்கும் கைகளுக்கும்
ஒருசேர பணிகொடுத்து!
அழகாக ஆடியது
கனவாக போச்சுதய்யா!!
 
 
சின்னமக்கா பொன்னுமக்கா
சிங்கார கண்ணுமக்கா!
சீரான இக்கலைய
சீரழிக்க வேணாமய்யா!!
 
தோளிலே கைபோட்டு
தோழனென இல்லேனாலும்!
கூனிப்போன எங்களைத்தான்
கோமாளி ஆக்காதய்யா!!
 
ங்குதற்கு காரவீடு
தகுதியா இல்லேனாலும்!
தரணியில் இப்போதும் - நாங்க
தரம் தாழ்ந்து போகலய்யா!!
 
 
குறிப்பு:
 
கடந்த மாதம் 22  ம் நாள் விஜய் தொலைக்காட்சியில் "நீயா-நானா" வில் "தமிழர்களின் பாரம்பரியம்"
பற்றிய விவாதம் அழகாக நடந்தேறியது. பாரம்பரியம் என்பது அவசியமில்லாதது என்று பேசிய நபர்களை
பார்த்தால் பொதுவாக இளைய தலைமுறையினர் என்றே சொல்லலாம்.
"தமிழர்களின் கலைகள்" பற்றிய பேச்சு எழுகையில் நம் பாரம்பரியக் கலைகளை தெரிந்துகொள்ளக் கூட
அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிந்தது. அதே சமயம் வடநாட்டு மற்றும் மேல்நாட்டு கலைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவுக்கு மனம் வேதனை அடைந்தது.
 
அதையும் தாண்டி அந்த நிகழ்ச்சியின் நடத்துனர் "திரு.கோபிநாத்" அவர்கள் கலைகளின் தன்மையையும்
அதை ஏன் நீங்கள் வெறுக்கிறீர்கள், நம் கலைகளை அருவெருப்பாய் பார்க்கும் நீங்கள் ஏன்  மற்ற நாட்டு கலைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள்?? என்று மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்து ஒரு நல்ல தீர்மானத்துக்கு வந்தார்.
இந்தப் பதிவின் மூலமாக "திரு. கோபிநாத் " அவர்களுக்கு என் பணிவன்பான வணக்கங்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
அன்பன்
மகேந்திரன்