Powered By Blogger

Monday, 6 February 2012

புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)






புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு

எழுத அழைத்த என் மரியாதைக்குரிய சகோதரர் ரெவெரி அவர்களுக்கு நன்றிகள். 
 
இதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....
 
வ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற முடியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
 
ழங்கப்படா தீர்ப்புகளாய் 
ஆயிரம் ஆயிரம் வாதங்கள் 
நிலுவையில் நிற்கையிலே 
இன்னும் சில வாதங்கள் 
பிரதி வாதங்களை எதிர்நோக்கி 
இவ்வாண்டு முழுவதும்!!
 
ருசக்கர வாகனத்தை
இயைபாய்த் தேடும் என் மனம்
இன்றேனும் நடக்கலாமே - என
இடிக்கும் தினமும்!
இந்த விடுமுறை நாட்களில்
இதை நான் செய்விக்க
இனிதே ஓர் தீர்மானம்!!
 
ருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!
 
நாளும் பொழுதுகளும் 
நயமாய் செல்கையிலே 
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!
 
தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
என்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.
ஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்
இவ்வாண்டின் முடிவில்.
 
த்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....
(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)
 
 
அருமைச் சகோதரி ஸ்ரவாணி
 
அருமைச் சகோதரி சந்திரகெளரி
 
அருமை நண்பர் கணேஷ்
 
 
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

Sunday, 5 February 2012

மனமகிழ் தருணம்!!







றைக்க இறைக்க
நீரூறும் கேணி - போல
நினைத்த கருக்களை எல்லாம்
எழுத்தாக வடிக்க
பதிவுலகம் கிட்டிடவே - நான்
என்ன தவம் செயதேனம்மா!!
 
ழுத்துக்களை வடித்த பின்
மனதில் உள்வாங்கி
உன்னெழுத்து பிடித்ததென
நயமாய் கருத்திடவே
நல்லுள்ள நட்புகள் கிடைத்திடவே
என்ன தவம் செயதேனம்மா!!
 
நீயும் ஒரு பதிவனென
அங்கீகாரம் கொடுத்திடவே
பல்விருது கொடுத்திங்கே
எனை மகிழச் செய்வித்த
என்னுயிர்த் தோழமைகளுக்கு
நட்புள்ளத்தை வாஞ்சையோடு
தாரை வார்க்கிறேன்!!
 
 
 
 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த  
தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

'லீப்ச்டர்" விருதினை அன்போடு எனக்களித்த எனதருமை நண்பர்
மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதை பெற்றதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்குஅளவே இல்லை...
 



========================================================================
இதோ என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை
அளிக்கவேண்டும் என்பது தார்மீகம். அதை இங்கே நிறைவேற்றுகிறேன்..
 
பதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...
 
 
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்
அருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.
 
 
பல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்கள் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.
 
 
தமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம்  என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.
 
வலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை. 

 
இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப, அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினைஇன்புற வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday, 3 February 2012

மூடுபனித் திரை!!!


னக்குள்ளே ஏதோ ஒரு மாற்றம் 
ஏன்? என்று புரியவில்லை!
பின்னந்தலையை தட்டி 
ஆயிரம் முறை கேட்டிடினும் 
பதில் ஒன்றும் கிடைக்கவில்லை!!
 
விழிகளின் முன்னே 
படலம் இட்டது போல 
பக்குவப்படா ஓருணர்வு!
திரைவிலக்கிப் பார்த்தேன் 
முற்றிலும் மூடுபனித் தோற்றம்!!
 

திகாலை விழித்தலுக்கும்
அந்திநேர அடங்களுக்குமிடையில்
அவதியாய் தோன்றிய
அரூப காட்சியெல்லாம்
அடைக்கலம் போனதெங்கே?!!
 
றம் செய விரும்பு - என  
ஆறுமுறை படித்தும்
புரியாது விழித்த
என்மகனைக் கண்டு!
இதுகூட புரியவில்லையா? - என
விழிசுருக்கி கேட்டதெல்லாம்
வழிமறைந்து போனதேனோ?!!
 

ருந்த பாலைச் சூடாக்கி
தேநீர்க் கலவையாய்
முகத்தில் மலர்ச்சியோடு
என் மனைவி கொடுக்கையில்!
சர்க்கரை குறைவென
சற்று தள்ளி வைத்ததெல்லாம்
திரைமறைவில் ஒளிந்ததேனோ?!!
 
ருசக்கர வாகனத்தில் 
அலுவலகம் செல்கையிலே!
விதிதவறி செல்வோரை 
வஞ்சித்து சென்ற நான்!
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த 
சகமனித உருவமொன்றை 
வேடிக்கை பார்த்து சென்றதேனோ?!! 
 

யண வீதியின் பாதையோரத்தில்
கந்தல் ஆடையோடு
இரவல் என வந்தோரை
இகழ்ச்சியாய் பார்த்துவிட்டு!
எத்தனையோ வழியிருக்க
இது என்ன பிழைப்பென்று 
ஏளனம் செய்ததேனோ?!!
 
ம்பவங்கள் நிழலாய்
விக்கித்து நின்றாலும்!
சாட்சிகள் ஏதுமின்றி
சடுதியில் வந்ததுபோல்  
சவக்கிடங்கில் புதையுண்டதேன்?!!
 

ந்திரம் ஏதுமில்லை
மாயமும் ஏதுமில்லை!
தானென்ற அகந்தையின்
சாயம்போன பண்புகளே
சாட்சிகள் என அறிவுற்றேன்!!
 
மாயப் பண்புகளாய்
முகம் மறைத்து நின்ற
மூடுபனித் திரையை!
இனிமேல் தோன்றாது  
விலக்கிட விழைந்தேன்!!
 

ரக்க குணங்களை
அடியோடு தவிர்த்து!
முடி ஏற்க வைக்கும்  
மனித மாண்புகளை
அறிந்திட விழைந்தேன்!!
 
றுமையில் உழன்றாலும்
செழுமையாய் உள்ளத்தை!
எளிமையாய் வைத்தாள
மேருமலை ஏவவைக்கும்
பொறுமையைக் கண்டறிந்தேன்!!
 

கொஞ்சமும் பணிவின்றி
நெஞ்சுநிமிர்த்தி பேசாது!
அவைமுன் அடக்கத்தால்
விதானம் ஏறவைக்கும்
நிதானத்தைக் கண்டறிந்தேன்!!
 
றுக்கான சொற்களால்
சுருக்கென்று பேசாது!
மயிலிறகு வார்த்தைகளால்
நயமாக பேசிடவே
அன்பினை இனம்கண்டேன்!!
 

னிதங்களின் நேயமெல்லாம்
பண்புகளின் சாயலில்தான்!
மூடுபனியால் திரையிட்டு
முகம்மறைத்து வைத்ததெல்லாம்
தூர்வாரா துர்பண்புகளே!!
 
தூய பண்புகளால்
தூர்வார முயற்சித்தேன்!
மூடுபனி விலகிய பின்  
முழுநிலவு ஆகிவந்தேன்!!
 
 
அன்பன்
மகேந்திரன்
 

Wednesday, 1 February 2012

சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)


ன்புநிறை தோழமைகளே,

வாழ்வில் ஓடும் நிமிடங்களுக்கு பின்னர் நாமும் ஓடி ஓடி
களைத்து திரும்புகையில் ஏதோ ஒரு இளைப்பாறல்
தேவைப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படி ஒன்று தான் 
விளையாட்டு. அந்த விளையாட்டை சொல் வடிவில் கொடுக்கும்
முயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை விளையாட்டு. நான் நினைத்த
ஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை
இங்கே புனையப்பட்டுள்ளது.
விடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த
சொல் எதுவென்று கண்டறியுங்கள்.

தோ விடுகதைக் கவிதை........



ந்தெழுத்தை தன்னுள்ளே
அழகாய் புதைத்து வைத்த
செழுமையான சொல்லிது!!
 
ந்தும் தனித்து நின்றால்
இருபொருள் படும்!
ஒன்றோ 
உணர்ச்சிகளின் ஒன்றன் 
பெயரை உரைத்து நிற்கும்!!
மற்றொன்றோ 
குற்றமென கண்டவுடன் 
நீதிகோரி 
சாடி நிற்கும்!!
 
முதலெழுத்து மட்டும் 
தனித்து நின்றால்!!
அரண்மனையின்
வெளிப்புறச் சுவரின்
பெயரை கம்பீரமாய்
உரைத்து நிற்கும்!!


மூன்றாம் எழுத்து திரிந்து
"ந" கர "அ" கரமாய்
மாறி நின்று
கடை இரண்டு எழுத்துடன்
கூடி மூன்றெழுத்தாய் நின்றால் 
சிறப்பான திறமை நான் - என 
தம்பட்டம் அடிக்கும்!!  
 
முதலெழுத்து திரிந்து 
"ப" கர  "அ" கரமாய்
மாறி நின்றால்
சத்தியம் தவறினும்
இதைத் தவறாதே - என
பழமொழி விளம்பி நிற்கும்!!
 
முதலெழுத்து திரிந்து
"வ" கர "ஆ" காரமாய்
மாறி நின்றால்
என்னிலிருந்து
இசை மழை கொட்டும் - என
இயம்பி நிற்கும்!!

னதருமை நண்பர்காள்!
இயம்பிடுவீர் இங்கு
நானுரைத்த
சொல் எதுவென்றே!!!!


தற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை
நாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.
நன்றிகள் பல.


அன்பன்
மகேந்திரன்