Powered By Blogger

Friday 20 May 2011

நாளைய வெற்றி உனக்காக!






பொறுமைத் தவமேற்று  - நண்பா
பொறுமைத் தவமேற்று!
பொன்னான வரங்கள் - இப்புவியில்
புதிதாய் உண்டு உனக்காக!!

உழைப்பில் கோலேச்சு - நண்பா
உழைப்பில் கோலேச்சு!
உன்னதமான ஊதியம் - இப்புவியில்
உறுதியாய் உண்டு உனக்காக!

முயற்சியில் முண்டியிடு - நண்பா
முயற்சியில் முண்டியிடு!
முத்து முத்தாய் - இப்புவியில்
முன்னேற்றம் உண்டு உனக்காக!

விழிகள் திறந்து பார் - நண்பா
விழிகள் திறந்து பார்!
வீசும் காற்று - இப்புவியில்
வீசும் சாமரம் உனக்காக!

போனது போகட்டும் - நண்பா
புத்துயிர் பெற்றுவிடு!
பாதைகள் ஆயிரம் - இப்புவியில்
புதிய பயணம் தொடங்கிவிடு!

தகதகக்கும் தங்கத்தை கூட - நண்பா
தேயத்தறிந்த பின் தான் தரம்பிரிப்பர்!
தயங்காமல் முன்னேறு - இப்புவியில்
தக்க இடம் உனக்குண்டு!

நெஞ்சுக்கு வேதனைதான் - நண்பா
நேற்றைய தோல்விகள்!
நெஞ்சுநிமிர்த்தி போராடு - இப்புவியில்
நாளைய வெற்றி உனக்காக!

இன்றைய பொழுதில்  இருக்கலாம் - நண்பா
மின்னலும் இடிகளும்!
உறுதியுடன் போராடு  - இப்புவியில்
நாளைய மழைத்துளிகள் உனக்காக!

வாழக் கற்றுக்கொள்  - நண்பா
வந்து வென்றவர் ஆயிரம் பேர்
வந்ததுயர் துரத்திவிட்டு - இப்புவியில்
வாழக்கற்றுக்கொள்!

தொடர்ந்து போராடு - நண்பா
தொலைத்துவிடு உன் முயலாமையை!
தொட்டுவிடலாம் - இப்புவியில்
தொடுவானம் கூட
உன் விரலின் நுனியில்!


அன்பன்

மகேந்திரன்

10 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மகேந்திரன்,

//தகதகக்கும் தங்கத்தை கூட - நண்பா
தேயத்தறிந்த பின் தான் தரம்பிரிப்பர்!
தயங்காமல் முன்னேறு - இப்புவியில்
தக்க இடம் உனக்குண்டு!//

உண்மையிலேயே கொஞ்சம் இன்று மனச்சோர்வாக இருந்தேன் ..

தங்களுடைய இக் கவிதை ஒரு எழுச்சியை தந்தது..
நமக்கும் ஒரு காலம் வரும் கலங்காதே..

என்ற தன்னம்பிக்கையை தந்தது.

நன்றி..
http://sivaayasivaa.blogspot.com

kunthavai said...

நல்லதொரு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை.
நன்றி

- அனு.

மதுரை சரவணன் said...

//வாழக் கற்றுக்கொள் - நண்பா
வந்து வென்றவர் ஆயிரம் பேர்
வந்ததுயர் துரத்திவிட்டு - இப்புவியில்
வாழக்கற்றுக்கொள்!//

கவிதை வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே,
ஆன்மிகம் அழகான பதிவுகள் தரும்
உங்களுக்கு சோர்வு வேண்டாம்
உங்களுக்கு எல்லாம் நல்லவைகளாக
நடக்க இறைவன் அருள்புரிவான்.

தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு,
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் மதுரை சரவணன் அவர்களே,
தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

Anonymous said...

""போனது போகட்டும் - நண்பா
புத்துயிர் பெற்றுவிடு!
பாதைகள் ஆயிரம் - இப்புவியில்
புதிய பயணம் தொடங்கிவிடு!""


அருமையான தன்னம்பிக்கை வரிகள்
கவிதை நன்று

தமிழ்தேவன்

akilan said...

தன்னம்பிக்கை கவிதை

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment