Powered By Blogger

Saturday 7 May 2011

நிமிடங்கள் தேடி!!



கல்லில் செதுக்கிய  சிற்பங்கள் கோடி - அதை
கவியேற்றத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி - அதை
சொல்லத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!!

அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி - அதை
அள்ளி  முடிக்கும்  நிமிடங்கள் தேடி!!

அடக்கி வைத்திருக்கும் எண்ணங்கள் கோடி - அதை
அவையேற்றத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

உள்ள ஊஞ்சலில் ஆடிடும் நினைவுகள் கோடி - அதை
உயிர்ப்பிக்கத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!!

மந்தகாச மணம் பரப்பிடும் மலர்கள்  கோடி - அதில்
மயங்கத் தொடங்கும்  நிமிடங்கள் தேடி!!

புள்ளி போடாக் கோலங்கள் வரைந்தது கோடி - அதை
புரிந்துகொள்ள நினைக்கும் நிமிடங்கள் தேடி!!

தெவிட்டாத இனிய இன்பங்கள்  கோடி - அதை
தேடி அடையும்  நிமிடங்கள் தேடி!!

சுற்றி நிற்கும் சொந்தங்கள் கோடி - அங்கே
சுத்தமான அன்பின் நிமிடங்கள் தேடி!!!

நிகழ்கால ஓட்டத்தின் மணித்துளிகள் கோடி - அதில்
நிம்மதியான எதிர்கால  நிமிடங்கள் தேடி!!



அன்பன்

ப.மகேந்திரன்

4 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//அடக்கி வைத்திருக்கும் எண்ணங்கள் கோடி - அதை
அவையேற்றத் தொடங்கும் நிமிடங்கள் தேடி!!

நிகழ்கால ஓட்டத்தின் மணித்துளிகள் கோடி - அதில்
நிம்மதியான எதிர்கால நிமிடங்கள் தேடி!!//

இதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ...

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
இந்த எதிர்பார்ப்பில் தான் நாம் நம் நிமிடங்களை
நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

நல்ல கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

////புள்ளி போடாக் கோலங்கள் வரைந்தது கோடி - அதை
புரிந்துகொள்ள நினைக்கும் நிமிடங்கள் தேடி!!///


அருமையான வாக்கியம்

நன்று


தமிழ்தேவன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர்
தமிழ்தேவன் அவர்களே
தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment