Powered By Blogger

Saturday 15 November 2014

கவிழாய் செம்பிழம்பே!!!








ங்கிருந்து வந்தாய் 
ஏகலைவன் எய்த கணையாய்!
எட்டுத்திக்கும் வியாபித்தாய் 
எரிகனலாய் என்னுள்ளே!!


சிறுகற்களின் உராய்வினில் 
சிரித்து வெளிவந்த 
சிறுகாந்தத் துகளோ - நீ 
சிந்தையிலே உறைந்திட்டாய்!!






ருண்டுவரும் ஆதவனின் 
உட்கரு நீயன்றோ!
உட்புறம் நீயிருந்தால் 
உள்ளமது கருகாதோ?!!


சூட்சுமச் சிறுகுஞ்சாய் 
சூது புரிந்தனையோ? 
சூழ்ந்த உன் ஆக்கிரமிப்பால் 
சூட்டிகை எய்தினேனே!!



ஞ்சினேன் அஞ்சினேன் 
அந்திமப் பொழுதென்று!
அங்ஙனம் இல்லையென்று -எனை 
ஆலிங்கனம் செய்வித்தாய்!!


நேற்றுப் பெய்த மழைதனில் 
நீற்றுப் போகவிருந்தேன்!
நொந்துபோன என் மனதை 
நொடிப்பொழுதில் ஊக்குவித்தாய்!!


ப்படியே இருந்துவிடு 
அணைந்துவிடாதே சட்டென்று!
அங்கமெல்லாம் உனைப்பரப்பி 
அடைகாத்துக் கொள்கிறேன்!!


னதூரம் என் பயணம் 
கடந்து போகும் வழிதனிலே 
கடும்போர் வந்திடினும் 
கவிழாய் செம்பிழம்பே!!!



அன்பன் 
மகேந்திரன் 

Wednesday 24 September 2014

கணையாழிக் கண்ணழகி!!








தேரிக்காட்டுக்குள்ளே 
தேங்கித் தேங்கி நிற்பவளே!
தேனான மொழியழகி - தங்க ரத்தினமே!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!
தேம்பி போனேனடி - பொன்னு ரத்தினமே!!


ன்னமே நான் உன்ன 
அலுங்காம தாங்குறேன்டி!
ஆனிப்பொன் பேரழகே - தங்க ரத்தினமே!
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!! 
அசையாம குலுங்குறேன்டி- பொன்னு ரத்தினமே!! 


சிங்காரப் பொன்மயிலே 
சிரிச்சி என்ன கொல்லாதடி!
ஸ்ரீரங்க தேவதையே - தங்க ரத்தினமே!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!
சில்லாகிப் போனேனடி - பொன்னு ரத்தினமே!!









குடிப் பாம்பாக 
மயங்கி நானும் போனேனடி!
மந்தாரப் பூங்கொடியே - தங்க ரத்தினமே!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!
மாதுளங் கொடியழகே - பொன்னு ரத்தினமே!!


தாவணிப் பொன்மணியே 
தாவித் தாவி செல்லாதடி!
தாங்குமா என் மனசு - தங்க ரத்தினமே!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!
தாமரை முகத்தழகி - பொன்னு ரத்தினமே!!


னுக்குள்ளே கரைஞ்சவளே
உசிருக்குள்ளே நிறைஞ்சவளே!
உம்மனசு என்னுசுரில் - தங்க ரத்தினமே!
உள்ளுக்குள்ளே புழுங்குறேண்டி - பொன்னு ரத்தினமே!!
உள்ளுக்குள்ளே புழுங்குறேண்டி - பொன்னு ரத்தினமே!!
 
 
 
 
மானே மாங்குயிலே 
மலையனூரு பூமயிலே!
மச்சான் மனசுக்குள்ளே - தங்க ரத்தினமே!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!
மடைவெள்ளம் பாயுதடி - பொன்னு ரத்தினமே!!


டன்குடி கருப்பட்டியே 
உத்து என்ன பார்க்காதடி!
ஊரெல்லாம் பார்க்குறாக - தங்க ரத்தினமே!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!
உசிரெல்லாம் வேர்க்குதடி - பொன்னு ரத்தினமே!!


காலம் நமக்குள்ளே 
காலனாக நின்றாலும்!
கண்ணுக்குள்ளே நீதானடி - தங்க ரத்தினமே!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!
கணையாழிக் கண்ணழகி - பொன்னு ரத்தினமே!!




அன்பன் 
மகேந்திரன் 

 



Sunday 21 September 2014

பிறந்தநாள் பரிசு!!


டந்த ஓராண்டு காலமாக இணையப்பக்கம் வருவதற்கு காலம் ஒத்துழைக்காததால் பதிவுகள் இடவில்லை என்றாலும். என்னையும் என் எழுத்துக்களையும் அங்கீகரித்து கிடைத்த பரிசு. அதுவும் இன்றைய வலைப்பதிவர்களில் நவீன ஒளவையாக நான் போற்றும் சீர்மிகு எழுத்தாளர் திருமதி.வேதா இலங்காதிலகம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் இந்த விருதினை பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மனம் குதூகலிக்கிறது.
எனது பிறந்த தினமாம் புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாளில் இந்த விருதினை பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தீந்தமிழ் சொற்களால் 
      பூந்தளிர் கவிபடைக்கும் 
செந்தமிழ் நாயகியே! - உம் 
      மாந்தளிர் கரங்களால் 
ஈந்த இப்பெரும் விருது 
      சேர்ந்தது என் நெஞ்சினிலே!!

மதிப்பிற்குரிய வேதாம்மா என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகளுடன் பெற்றுக்கொள்கிறேன் விருதினை மட்டற்ற மகிழ்ச்சியோடு.

1) விருதினை என்னுடன் பகிர்ந்த வலைப்பதிவரின் தளமுகவரி...

சிலபத்து அடிகளில் 
        சிறுகாவியம் படைத்திடும் 
சீர்மிகு எழுத்தாளர் 
        சிறப்பான கவியாளர்!!

ன்றே முக்கால் அடியால் 
        ஓங்கி ஒலித்திட்டார் வள்ளுவர் அன்றே!
ஒன்றிரண்டு கூட்டி 
        ஓவியம் படைத்திட்டார் வேதாம்மா இன்றே!!

கவின்மிகு சொற்களால் காவியம் படைக்கும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் வலைத்தளத்தை  இங்கே காணுங்கள்.

2) என்னைப் பற்றி ...

நான்மாடக் கூடலே 
      நான் பிறந்த ஊராம்!
நாட்கள் கரைசேர்த்ததோ 
      திருமந்திர நகராம்!

ணியின் நிமித்தமாய் 
      அமீரகம் நுழைந்து 
அங்குமிங்கும் பறந்தோடும் 
      விக்கிரமாதித்தன் நானே!

தாய் தந்த மொழியினுக்கு 
      அணில் போல தொண்டாற்றிட 
விரல்வழி ஊறும் எழுத்துக்களை 
       தூரிகையில் சமைக்கிறேன்!

நாட்டுப்புறக் கலைகளை 
       நயமாய்ச் சொல்லிடவே 
நாள்தோறும் எத்தனிக்கிறேன் 
       காலம் கைகூடட்டும்!!

3) எனக்குக் கிடைத்த விருதினை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கும் பதிவர்கள்....


என்னைத் தொடரும் அனைத்து பதிவர்களுடனும், இனி தொடரவிருக்கும் புதிய பதிவர்களுடனும் இந்த விருதினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..


இன்னொருபுறம் என் பிறந்தநாள் பரிசாக தனி பதிவே இயற்றி இருக்கிறார் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் தனிமரம் நேசன் அவர்கள். உங்களின் அன்பிற்கு என்றென்றும் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோதரரே. பதிவினை இங்கே காணுங்கள்.


அன்பன் 
மகேந்திரன் 

Tuesday 16 September 2014

வேய்கூரை தார்மீகம்!!!







கூக்குரல் கேட்டது

கூப்பிடும் தூரத்தில் 
கூர்செவி மடுத்தேன் - ஆங்கே 
கூர்மதி உறைந்தேன்!!


திலியாய் நிற்கும் 
எவனோ ஒருவனின் 
ஏக்கப் பெருமூச்சு - கணையாய் 
எட்டியது செவியில்!!
 
 

 


 
னிந்த சோதனை 
எனக்கு மட்டும் வேதனை 
ஏனையோர் அனைவரும் - எனை 
ஏற்றுப்பார்க்கும் வேளையில்!!


ல்லாய் போனாயோ 
கடவுளும் நீ தானோ 
காற்றுக்கும் கேட்குமே - என் 
கதறலின் செவ்வொலி!!
 
 
 
 
ற்றே நிலை மறந்தேன் 
சாய்ந்து அமர்ந்துவிட்டேன் 
சன்னமான ஒலியதில் - நானோ 
சமைந்து சிலையாய் போனேன்!!


புத்திக்கு விளங்கவில்லை 
புரியாத ஒலிக்கூவல் 
புரிந்திட விழைகையில் - சிறு 
புன்னகை தருவித்தேன்!!
 
 
 
 
சுற்றிவரும் ஆதவனும் 
சுழலுகின்ற பூமியும் 
சூழ்ந்துள்ள காற்றும் - எதுவும் 
சூதுபேதம் பார்ப்பதுண்டோ?!!


னக்கிருக்கும் இந்தநிலை 
உலகில் யாருக்கோ நேற்றைய நிலை 
உன்மத்தமாய் சொல்லப்போனால் - இனி 
உதயமாகும் நாளைக்கு யாருக்கோ!!
 
 
 
 
யல்பான வாழ்வதனில் 
இருள்சூழும் வேளைதனில்
இருதலைக்கொள்ளி ஆனோர் சிலர் 
இரும்பிதயம் கொண்டோர் பலர்!!


னக்கென்று வரும்போது 
தார்மீகம் படைத்திடுவார் 
தாளாத துன்பத்திலும் - இயல்பாய் 
தரணியில் வாழ்ந்திடுவார்!!
 
 
 
 
சுண்ணமிட்ட புழுவா நீ 
சுயநிலை ஏன் மறந்தாய்?!
சுன்னநிலை அடைவதற்குள் - அதற்கு 
சூத்திரம் கற்றுக்கொள்!!


வெந்து சாகிறேன் என 
வெறும்பேச்சு தனைவிடுத்து 
வெற்றிவாழ்வு தனைக்காண - உனக்கான 
வேய்கூரை அமைத்துக்கொள்!! 



அன்பன் 
மகேந்திரன்