Powered By Blogger

Friday 10 August 2012

காவியமே கண்ணுறங்கு!!!







குண்டுமல்லி தோட்டத்திலே 
குவிந்திருக்கும் மல்லிகையே - உன்
கூட்டாளி நானிருக்கேன்
குவளைமலரே கண்ணுறங்கு!!
 
கைகொட்டி சிரித்திருக்கும்
பட்டுமேனி பெட்டகமே
யார் கண்ணும் படுவதற்குள்
காந்தள்மலரே கண்ணுறங்கு!!
 
சானி மூலையிலே
உலையங்கே கொதிக்குதம்மா
போயி நானும் பார்த்துவரேன்
பூந்தளிரே கண்ணுறங்கு!!
 
 
 
சும்பால் வாங்கிடவே 
பணமிங்கே போதலியே 
உலைத்தண்ணி ஊத்திவாறேன் 
மாந்தளிரே கண்ணுறங்கு!!
 
ட்டுமரக் கப்பலோட்டி 
கடலுக்கு போன அப்பா 
பொழுதடைய வந்திடுவார் 
பூச்சரமே கண்ணுறங்கு!!
 
யரை மீனும் ஆரமீனும்
அள்ளிக்கொண்டு வருவாரடி
அதுவரைக்கும் பொறுத்திருக்க
ஆரவல்லி கண்ணுறங்கு!!
 
 
வாளைமீனும் வழலை மீனும்
வலைபோட்டு பிடித்தமீனும்
வட்டியிலே போட்டுத்தாறேன்
வாடாமலரே கண்ணுறங்கு!!
 
விடியலிலே போனவரு 
பொழுதடைஞ்சி போனபின்னும் 
வராதது ஏனடியோ 
வண்ணக்கிளியே கண்ணுறங்கு!!
 
ல்லைதாண்டிப் போனாரோ
ஏதுமங்கே ஆனதுவோ
எம்மனசு தவிக்குதடி
கனிமொழியே கண்ணுறங்கு!!
 
 
கல்விளக்கு ஏற்றிவச்சேன்
ஆளவந்தோன் உயிர்காக்க 
அல்லும்பகலும் விழித்திருந்தேன் 
அல்லிமலரே கண்ணுறங்கு!!
 
ண்டைநாட்டு கப்பற்படை 
ஆட்டம்தான் போட்டதுவோ 
அவியுது மனமெனக்கு 
காவியமே கண்ணுறங்கு!!
 
ந்த உயிர் வந்தால்தான் 
நம்ம உயிர் நிலைக்குமிங்கே
அதுவரைக்கும் பொறுத்திருக்க
புதுமலரே கண்ணுறங்கு!!
 
 
நித்தம்நித்தம் நெஞ்சுக்குள்ளே 
வேதனைய சுமந்திருக்கும் 
நம் பிழைப்பு மாறுமோடி
மலர்விழியே கண்ணுறங்கு!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 

Monday 6 August 2012

எம் உயிரில் அடிக்காதே!!


சிதறிக் கிடப்பதை 
சீராக கூட்டிவைத்து 
சீர்மிகு தெருக்களை 
செம்மையாய் மாற்றிவரும் 
செம்மையாளர் என் தந்தை!!
 
துப்புரவுத் தொழிலது 
தூரோடு வேரறுத்து 
என்னோடு நிற்கட்டும் 
பள்ளிசென்று படித்து 
பார்போற்ற வளர்ந்திடென 
பள்ளிக்கு அனுப்பிவைத்தார்!!


வாடியபயிரை இனம்காண்பதுபோல்
வாடிநிற்கும் எம்மின் 
வறுமையை அறிந்திட்ட 
வாஞ்சைமிகு அரசாங்கம் 
வழங்கியது கல்வி உதவித்தொகை!!
 
ரசுகொடுத்த பணமதை 
ஆசிரியர் எனும் போர்வையில் 
நடமாடும் பிணங்களோ  
அகல வாய்திறந்து
ஏப்பமிட்டு போனாரே!!


முதுகெலும்பு வளையாது
காசுபார்க்க உனக்கு
ஆயிரம் வழியிருக்க
கல்விக்காய் எமக்களித்த
உதவித்தொகைதானா கிடைத்தது!!
 
சிறுகுழந்தையாம் எம்மின் 
வாழ்வாதாரத்தில் கைவைக்கும் 
வக்கிரபுத்திக்காரன் நீயோ
பணப்பசி எடுத்தால்
பெற்றபிள்ளையையும் விற்பாயோ?!!
 
ணம்தான் உனது
பிரதானப் பிரச்சனை என்றால்
உன் உடற்கூறு அறுத்து
விற்றுப் பிழைத்துவிடு
கல்விக்காய் ஏங்கும்
எம் உயிரில் அடிக்காதே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Thursday 2 August 2012

துயிலெனும் தவம்!!






துயரங்கள் ஆயிரமேனும்
தும்பைமலர் கண்ணயர்ந்தால்
துயரின் வலிமைதனை
துண்டுதுண்டாய் ஆக்கிவிடும்
துயிலதுவும் ஒரு தவமே!!

சாத்திரம் பலகற்று

சூத்திரம் அறிந்தபின்னே
பாத்திர திறன்கொண்டு
முத்திரை பதித்துவிட்டால்
நித்திரை ஒரு தவமே!!
 

 


ருப்பு நிலையில்
இறுக்கம் இருப்பினும்
கருவிழியை இமைதழுவும்
இறப்பு நிலையாம் 
உறக்கம் ஒரு தவமே!!
 
நெக்குறுக்கும் நோய்களை
நெற்குளிகை தவிர்த்திட்டு
நெடுந்தூரம் விலக்கிட
நாழிகைகள் சிலவேனும்
நல்லுறக்கம் கொண்டிடுக!!
 
 


வாழ்க்கை எனும்
சித்திரம் வரைவதற்கு
உடம்பு எனும் 
சுவர் அவசியமென்றால் 
தூக்கம் எனும் 
தூரிகை அவசியமே!!

திங்கள்கடந்து உறங்கும்
கும்பகர்ண உறக்கம் தேவையில்லை
சிறுயிதழ் இமைகளை
சிறுகச்சிறுக மூடித்திறக்கம்
சிற்றிறகு கோழியின்
சிறு உறக்கமேனும்
சித்தமாய்க் கொண்டிடுக!!



அன்பன்
மகேந்திரன்