Powered By Blogger

Monday 9 December 2013

தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2





கட்டியங்காரன் அறிமுகம் !!!


க்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......





லால தோப்புக்குள்ளே 
அமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய 
பணிந்துவந்தேன் - ஐயா 
உத்தமரே காக்கவேணும்!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


ட்டிளம் காளையிவன் 
கட்டியங்காரன் எந்தன் பெயர்
பார்போற்றும் கலையிதுவின் - ஆமா 
உயிர்நாடி நான் தானய்யா!!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




ண்போன்ற காவியத்தை 
கதையாக்கி நடிக்கும்போது    
இடையிடையே தொய்கையிலே - நானும்
காண்போரை கவர்ந்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


கோடிட்ட இடங்களிலே 
கோமகனாய் வாழ்ந்துவந்தேன் 
கோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா 
கோமாளி என்றனரே !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!




வைக்கோலால் செய்யப்பட்ட 
குடைபோல விரிந்திருக்கும் 
உடைகளில் நான் வருகையிலே - ஆமா 
காண்போரின் நகையொலிக்கும் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


தையில் வரும் நாயகர்கள் 
கதைப்பாட்டு மறக்கையிலே 
அதையெடுத்து நான் பாடி - அழகா 
கலை உயிர்ப்பை காத்துவந்தேன் !!
தந்தோம் தந்தோம் தனதன 
தந்தோம் தனதோம் !!


==== தெருக்கூத்து தொடரும் 







அன்பன் 
மகேந்திரன்

Monday 4 November 2013

எத்திசை நகர்ந்திடினும்!!!!







வசம் தரித்து 
படைகள் பலகொண்டு 
வெற்றிவாகை சூடிய 
மற்போர் வேந்தனல்ல!
ஆயினும் எனைச்சுற்றி - ஏன் 
சூழ்ந்தது போர்மேகம்?!!



நிகழின் நிகழ்வுகளை 
நெம்புகோல் கொண்டு 
நொடிதோறும் கடத்தும் 
சாமானியன் நான்!
ஆயினும் எனக்குமேல் - ஏன் 
படர்ந்தது சுகபோகம்?!!



குருதியின் நிறம்கண்டால் 
உறுதி நிலைகுலைந்து 
உதிரம் கறுத்துப்போகும் 
வன்மம் மறுப்பவன் நான்!
ஆயினும் எனக்குமுன்  - ஏன் 
விரிந்தது கொலைக்களம்?!!


னக்கான உரிமையும் 
எனக்கான மரியாதையும் 
எதேச்சையாக விரும்பும் 
இயல்பான மனிதன் நான்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
வியந்தது பூகோளம்?!!
கையில் கிடைத்ததை 
முழுதும் பையில் போடாது 
உள்ளம் நிறைந்தோருக்கு 
அணிலாய் உதவி நின்றேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
ஊதாரி என்றதொரு சமூகம்?!!


ரிதான் என்றுகேட்டு 
கைக்கு வந்ததெல்லாம் 
சபைக்குச் செல்லாமல்
குகைக்குள் பூட்டிவைத்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கஞ்சன் என்றதொரு சமூகம்?!!
செவிவழி நுகர்ந்ததை 
அறிவுவழி உணர்ந்திட 
வினாக்களை அம்புகளாய் 
விடாது தொடுத்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
கர்வன் என்றதொரு சமூகம்?!!


துவும் சரிதானென 
வாய்மொழிந்த வினாக்களை 
இருதயத்தில் பூட்டிவைத்து 
அப்படியே ஏற்றுக்கொண்டேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன் 
மூடன் என்றதொரு சமூகம்?!!
துதான் நடந்தது
இப்படித்தான் செய்தேன் என
உள்ளதை உள்ளபடி
அப்படியே கூறிவந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்?!!

டந்ததை இல்லையெனவும்
நிகழாததை ஆம் எனவும்
கற்பனைகள் பல புகுத்தி
சொற்பகாலம் கழித்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
பெரும் பொய்யன் என்றனர்?!!
றிவின் செறிவினை
ஆக்க வழியில் செலுத்திட
சற்றே நிமிர்ந்து
மிடுக்குடன் நடந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்?
அகம்கொண்டோன் என்றனர்?!!

ருக்கும் அறிவினை
இருளில் புதைத்துவைத்து
சற்றே வளைந்து
நெகிழ்வுடன் வாழ்ந்திருந்தேன்!
ஆயினும் எனைப்பார்த்து - ஏன்
அடிவருடி என்றனர்?!!
லமோ இடமோ
எப்புறம் திரும்பிடினும்
முன்னே பின்னே
எத்திசை நகர்ந்திடினும்!
எனக்கான அசைவுகளுக்கு - இங்கே
பெயர்கள் பல உண்டு!!


லங்கி நின்றேன்
களப்பெயர்கள் கண்டு
குழம்பி நின்றேன்
குற்றம் செய்தவன் போல்!
எப்படித்தான் இருப்பது - என
இயல்நிலை மறந்துபோனேன்!!


டர்ந்து படர்ந்த ஆலமரம் கூட
விழுதுகள் இருந்தும்
ஆணிவேர் ஒன்றே துணையென
அகன்று நிற்கக் கண்டேன்!
எப்பெயர் கொண்டிடினும்
இயற்பெயர் வழுவாதே - என
உணர்த்துவதாய் தோன்றியது
உவகை கொண்டேன்!!!



அன்பன்
மகேந்திரன் 

Monday 28 October 2013

தெருக்கூத்து தெம்மாங்கு!!!

ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த 
தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த 
இடம் உண்டு. அப்படி பெருமை வாய்ந்த கலையின் 
முன்னோடியாம்  தெருக்கூத்து கலை பற்றி இங்கே கவிதையாக 
தருவதற்கு முயற்சிக்கிறேன். சேகரித்த செய்திகளை 
நல்வண்ணம் கொடுத்திட எத்தனிக்கிறேன். பிழைகள் ஏதும் 
இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் என்னைத் 
திருத்திக்கொள்கிறேன். அழகான கலை இது சரியான முறையில் 
பிழை இல்லாமல் பின்வரும் சந்ததிகளுக்கு சென்று சேரவேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே 
ஒரே பதிவில் சொன்னால் மிகவும் நீளமாக ஆகிவிடும் என்ற 
காரணத்தால் தொடர் கவிதையாகத் தருகிறேன், அதையும் என் குரலில் 
பாடி ஒலிப்பேழையாக தருகிறேன். 

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் ... இதோ பாடல்.....




த்தங்கரை மேலிருக்கும் 
அழகுப் பிள்ளையாரே! ஆனை முகத்தோனே 
அரிதாரம் பூசிவந்தேன் 
ஆனை முகத்தோனே!!


ரணியெங்கும் புகழ்கொண்ட 
தங்கத் தமிழ்த்தாயே! எங்க தங்கத் தமிழ்த்தாயே 
முன்னிருந்து காக்கவேணும் 
மூத்தகுடித் தாயே!!


ங்களுக்கு இந்த கலைய 
கத்துதந்த சாமி! ஐயா கத்துதந்த சாமி 
குருபாதம் தொழுகின்றோம் 
ஆசி வேணுமய்யா!!


ன்னனன்னே தானேனன்னே 
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே 
தன்னான தானேனன்னே  
தானேனன்னே தானே!!


ந்திருக்கும் பெரியோரே 
ஆசி வேணுமய்யா! உங்க ஆசி வேணுமய்யா!
உயிராக சுமக்கும் கலைய 
காக்க வேணுமய்யா!!


முக்கனிபோல் சுவையான 
தெருக்கூத்து கட்ட! அந்த நல்லகூத்து கட்ட!
முத்தமிழை கூட்டிவந்தோம் 
நாடோடி நாங்க!!


தெவிட்டாத தேன்தமிழில் 
பாடிவந்தோமய்யா! அழகா பாடிவந்தோமய்யா!
தெருக்கூத்து எனும் கலைய 
ஆடிவந்தோம் ஐயா!!


நாடகத்தின் முன்னோடி 
எங்க கலை ஐயா! இந்த தங்க கலை ஐயா!
கலையின் வடிவமைப்பை 
சொல்ல வந்தேனய்யா!!


தினாறு கலைஞரோட 
வாத்தியாரும் இருக்கார்! நம்ம வாத்தியாரும் இருக்கார் 
அழகான இந்த குழுவுக்கு 
சமா என்று பேரு!!


பேர்பெற்ற எங்க கலை 
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம் 
கட்டைக் கூத்து தானே!!


டக்கு தெற்கு என 
வண்ணம் கொண்டோமய்யா! நல்ல வண்ணம் கொண்டோமய்யா!
அண்ணாமலை தீரம்விட்டு 
ஆடி வந்தோமய்யா!!



........ தொடர்ந்து கூத்து கட்டுவோம்......









அன்பன் 
மகேந்திரன்

Monday 21 October 2013

அமர காவியம்!!!!







காலாற நடந்திருந்தேன் 
கடற்கரைச் சாலையில்
கசகசவென ஒலிக்கீறல்கள் 
காற்றில் மிதந்துவந்தன 
காதுகளை தீட்டிக்கொண்டேன்!!


யிலான பெண்கள் ஒருபுறம் 
ஓய்வூதியம் வாங்குவோர் ஒருபுறம் 
ஓடவேண்டுமே என்று 
ஒப்புக்கு ஓடுவோர் ஒருபுறமென 
ஓடினோர் பலரங்கே!!



டல்பருமன் கனக்க 
உதிரம் கொதித்திருக்க 
ஊசிபோல ஆவோம் என 
உதித்த ஆர்வ மிகுதியால்
உக்கிபோடும் கூட்டமொருபுறம்!!


வாய்விட்டு சிரித்தால் 
வராது நோய்களென 
வராத சிரிப்புகளை 
வலுவாக இழுத்துவைத்து 
வாய்பிளந்து சிரிப்போர் ஒருபுறம்!!
ட்டழகுக் கன்னியரை 
கடைக்கண் பார்வை வீசி 
காணும் விழியாலே 
கவர்ந்திடத் துடிக்கும் 
காளையர்கள் ஒருபுறம்!!


ருக்கும் நேரம் கொஞ்சமென 
இரட்டிப்பு நடைபோட்டும் 
இரண்டு சுற்று முடிக்காத
இளைப்புடன் நடைபோடும்  
இல்லத்தரசிகள் ஒருபுறம்!!
ல்லோரும் அவரவர் பணியை 
ஏற்று பார்க்கையில் 
எங்கிருந்து வந்தது 
ஏகப்பட்ட ஒலிக்கீறல்கள் - என 
எட்டிப் பார்த்தேன்!!


ந்தாலும் போனாலும் 
வாழ்ந்த சுகம் இல்லையென 
வாய்த்த மருமக்கள் குறைபாடும் 
வயதான மனிதர்களின் 
வாஞ்சையான குமுறல்கள்!!
ள்ளி விடுமுறைக்கு 
பத்துநாட்கள் கிடைக்கும் 
பறக்கவேண்டும் அம்மா வீட்டிற்கு - என 
பிறந்தவீட்டு நிழல்தேடும் 
பிரிந்துவந்த மகள்களின் திட்டங்கள்!!


ன்றும் போகவேண்டுமா 
இன்னல்கள் தீர்ந்துவிடாதா 
இஞ்சி தின்ற மேலாளரை 
இன்றும் காணவேண்டுமா - என 
இதம்தேடும் அலுவலர்கள்!!
ன்னதான் சேர்த்தாலும் 
எள்ளளவும்  நிலுவையில்லை 
என்னடா வாழ்க்கையிது 
என்றுயரும் என் நிலைமை - என 
ஏக்கமான சாமானியரின் சலிப்புகள்!!


ன்றையொன்று உரசிக்கொண்டு 
ஓராயிரம் ஒலிக்கீறல் பாய்ந்து 
ஒட்டிக்கொண்ட தருணமதில் 
ஓர் உண்மை விளங்கியது - எனக்குள் 
ஒளிக்கீறல் பாவியது!!
ண்டாண்டு காலங்கள்
அவதியாய் உருண்டாலும்
அரும்பும் பச்சையமாய் 
அழியாச் சுவடுகளாய் - இப்புலம்பல்கள்
அமர காவியமே!!!


அன்பன்
மகேந்திரன் 

Thursday 17 October 2013

மருளும் மான்விழி!!!







ருண்ட விழிப் பார்வையாலே 
சுருட்டி எனை வைத்தாயே!
பருவமிங்கு மாறினாலும் - உன் 
உருவம் காண மகிழ்ச்சியே!


துள்ளல் நடைபோட்டு 
கொள்ளைகொண்டு போகிறாய்!
அள்ளிக் கொஞ்சிடவே - என் 
உள்ளம் துடிக்கிறதே!!
 
 
வியமாம் உன்னழகுக்கு 
காவியம் பல உண்டு!
மேவிவிட்டாய் நெஞ்சத்துள் - என் 
ஆவியும் உனைத் தேடுதே!!


றிபோல் அருகமர்ந்து 
கூறிவிடு செவிமடுப்பேன்!
பிறிதோர் பெயருண்டா - என 
அறியத் தந்திடுக!!
 
 
பிஞ்சுமொழிச் சொற்களால் 
கொஞ்சிப்பேசும் பாவலனே!
அஞ்சுகத் தமிழாளை - நீவீர் 
கெஞ்சிக் கேட்டிடுக!!


த்தித் தாவிவரும் 
சித்தம் மலரச்செய்யும்!
பித்தன் விரலேகிய - உன்னை 
முத்தமிழ் மான் என்றேன்!!
 
 
ண்மறை இமைசுற்றி 
வெண்ணிறம் பாவிய! 
திண்ணிய கொம்பு கொண்ட - உன்னை 
தண்மையாய் கலை என்றேன்!!
 
 
ளிங்குத் தோல்போர்த்தி 
நளின நடைபோட்டு! எமை 
களிகொள்ளச் செய்த - உன்னை 
தெளிவாய் பிணை என்றேன்!!
 
 
ரும்பழுப்பு நிறம்பூண்டு 
நெருங்கிய மரநிழல் வாழும்!
இரும்புக் கொம்பேற்ற - உன்னை 
விருப்பாய் கடமா என்றேன்!!
 
 
டுக்கான பாறைகளில் 
மிடுக்காக நடைபோட்டு!
துடுக்காக விளையாடும் - உன்னை 
எடுப்பாய் வருடை என்றேன்!!
 
 
வெம்பாலை நிலங்களில்
செம்மாந்த திருகு கொம்பொடு!
தெம்மாங்கு பாடிவரும் - உன்னை 
செம்பாலை இரலி என்றேன்!!
 
 
ழகாய் வெண்ணிறத்தால்
கழனிநிறை நெற்கதிராய்!
குழவியாய் நெஞ்சம்பதிந்த - உன்னை
சோழக உழை என்றேன்!!
 
 
யக்கிடும் ஒயிலால்
தயங்கித் தயங்கியோடும்!
கயல்விழி அழகாமே - உன்னை
நயமுடன் நவ்வி என்றேன்!!
 

 


மாலவன் கையடக்க
இலச்சினை வில்போல!
கோலமிகு விழிகொண்ட - உன்னை
சிலம்பினேன் சாரங்கம் என்றே!!
 
 
 
அன்பன்
மகேந்திரன் 

Tuesday 15 October 2013

நிழற்படக் கவிதைகள் - 3



சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் வெளியிட்ட
படக்கவிதைகள் இங்கே தளத்தில் இப்போது.....







அமிலக் கரைசல்!!!


னடா அழுகிறாய்?!
வடிநீர் துடைத்திடடா
ஏகலைவன் என
பிரகடனப்படுத்தியும் - உனை
ஏய்த்துப் பிழைக்கின்றாரோ
எசமான பிண்டங்கள்! - உன்
விழிநீர் வீழ்ந்துவிட்டால்
அமிலக் கரைசலடா - அவரை
அமிழ்த்தும் கரைசலடா!!!







சாதகத் தேடல்!!


னக்கான தேடல்கள்
தொலைதூர முடிவிலியாய்!
துணையொன்று தேவையென
எண்ணித் திளைக்கையில்
மென்தோல் வருடினாய்
திண்தோள் கரம் இணைத்தாய்!
பாதத்தில் பாதம் பிணைத்து
உனைச் சுமந்துகொண்டே
தேடலில் மூழ்குகிறேன்!!!


அன்பன்
மகேந்திரன்

Friday 11 October 2013

நீயும் இப்படித்தானா??!!!






தோல் குடத்துக்குள்
சூல் கொண்டு
கருவறையினின்று
உருவாகி வந்தவனே!!


துதான் மாட்சி
இவைதான் மாண்பு - என
பெற்றோர் உரைக்க
செவிமடுத்து வளர்ந்தவனே!!



தான்கொண்ட துன்பமது
தனயனுக்கு வேண்டாமென
தகப்பனின் செல்லத்தில்
தழும்பித் தவழ்ந்தவனே!!


டந்தால் அய்யகோ
நடுப்பாதம் வலிக்குமென
நடுமுதுகில் சுமந்ததால்
சுகவாசி ஆனாயோ?!!




நாளை என்றொரு நாளில்
நானிலம் பெருமையாய் - உனை
முகம் நிமிர்த்து பார்க்குமென
நயமாக நினைத்திருந்தேன்!!


றிவார்ந்த நூல் சுமக்கும்
செறிவான கரங்களில்
கொலைப்பழி செய்யும்
அரிவாள் சுமந்ததேனோ??!!




நாளை உனை இவ்வுலகில்
அரியணை ஏற்றுவிக்க
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்
இறைவனுக்குச் சமமன்றோ!!


ட்டிரை அகத்திக் குலைபோல்
சிரம்வெட்டிச் சாய்க்கும்
அறிவற்றோருக்கும் உனக்கும்
வித்தியாசம் இல்லையா??!!




ல்வியிலும் செயலாற்றலிலும்
சமூக சிந்தனைகளிலும் - சிறந்த
மாணவர் மத்தியில் உனைப்போல் சிலர்
களைந்தெறியப்பட வேண்டிய களைகளே!!


ன்று வந்ததடா உனக்குள்
கொலைச்செயல் மனோபாவம்
யாரிங்கு காரணம்
உனக்கான இந்நிலைக்கு??!!




ளர்த்த எம் குற்றமோ?
செதுக்கிய சமூகத்தின் குற்றமோ?
உய்வித்த கல்விநிலையக் குற்றமோ?
நானிங்கு அறியேனய்யா!!!


ற்கல்வி பயின்று வா
நல்லொழுக்கம் கற்று வா - என
யாரிங்கு உரைத்தாலும்
நஞ்சென தோன்றுகிறதோ?!!




டிமேல்  அடிபட்டாலும்
பொதிசுமக்க வேண்டுமென
கழுதைக்கும் தெரியுமடா
உனக்கேன் தெரியாது போயிற்று?!!


சீரிய நின் சிந்தனைகளால்
நாளைய சமூக மாற்றம்
உன் கையில் தானென - யாம்
எண்ணியிருந்த வேளையில்!!




நெஞ்சம் குறுகிப் போனதய்யா
உள்ளம் கருகிப் போனதய்யா
நான் காணும் இவ்வுலகில்
நீயும் இப்படித்தானா??!!


அன்பன்
மகேந்திரன்



















Monday 26 August 2013

பொய்கள் மெய்த்த பொழுது!!!







னிப்பாறை மேல் பதிந்த  
வெற்று உள்ளங்கை போல 
சில்லிட்டு உதிரம் 
உறைந்தே போன தருணமது!!


ங்கியடித்த சுத்தியல் 
சிற்றங்குலம் இடம் மாறி 
பெருவிரலை பதம்பார்த்தது போல் 
சுருண்டுபோன தருணமது!!




பெருந்திரள் மக்கள் கூடும்
சபையின் நடுவினிலே
உடையற்றுப் போன
நிர்வாணத் தருணமது!!


நிகழ்நிலை தவறி 
சுயம் மறந்துபோனவன் 
மீள்நிலை திரும்பி - மீண்டும் 
மனம் கருகிப்போன தருணமது!!



குப்பையில் தவழ்ந்து 
விண்ணேற்றம் கண்டபின் 
கோபுர நிலை தடுமாறி - பாழும் 
கிணற்றில் வீழ்ந்த தருணமது!!


பொய்ச்சிறகை விரித்து 
பெருவானம் வியாபித்து 
சிறகொடிந்து போனதும் 
விறகொடித்த மரமானதேன்?!!
ம்பிக்கை எனும் தேனில் 
நஞ்சூற்றி குடித்துக் களித்து 
நீலம் பரவிடுகையில் 
நீச்சம் வீழ்ந்தது ஏன்?!!


நிதர்சனம் எனும் அழகு 
நித்திலமாய் இருக்கையில் 
பொய்யரிதாரம் பூண்டதேனோ 
செய்யாப் புகழுக்காக!!
மாற்றான் ஒருவன் 
இவனுக்கில்லை ஈடென 
வேற்றோன் மெச்சுவதற்காய் 
பொய்வேடம் தரித்ததேனோ !!


பொய்யன் இவனென
பொய்கள் சாயமிழந்த பொழுது
முன்னிலை நிற்போரை
நோக்குதல் கூச்சமன்றோ?!!
ன்னிலை தவறி
உண்மைகளை மறைத்து
பொய் பூக்களுக்கு நீரூற்றுவதால்
வீசும் மணத்திற்கு வாசமுண்டோ?!!

ற்ற உணமைகளை
நிற்கதியாய் விட்டு
பொய்யுரைக்கும் பொழுதுகள்
தற்கொலைக்குச் சமமாம்!!!!



அன்பன்
மகேந்திரன்