முகில் பூக்கள்!!!
வேரில் நீரற்று
இலைகள் உதிர்த்து
தலைகுனிந்த நேரமதில்!
மண்மீதில் என்நிலையை
மீட்டுக் கொடுத்திடவே
என்னுயிருள் நீரூற்றி
முகில் பூக்களாய் வந்தாயோ!!!
துளிப்பொறி ஈன்றிடு!!!
மூட்டியது யாரென்று
மிரட்டிப் பார்த்தேன்
பதிலொன்றும் கிடைக்கவில்லை!
முழுதும் எரிந்து
மூர்ச்சையாகிப் போகும் முன்
துளிப்பொறி ஈன்றிடு!
சுமந்து சென்று
சூட்சுமத்தின் விதையாக்குகிறேன்!!!
அன்பன்
மகேந்திரன்