Powered By Blogger

Sunday 24 March 2013

அகவுறை ஆற்றுப்படுகை!!!






பிறந்த இடமதை

துறந்து பாய்ந்தேன்!
திறந்த மடையாய் 
கறந்த பால்போல் 
குறவஞ்சி பாடிவந்தேன்!!

'ஆ'வென்று
அரற்றினேன் 
'ஓ'வென்று 
ஓலமிட்டேன்
'கோ'வினின்று 
தாவியபின்!!




ச்சிதனை விட்டு 
கூச்சல் தணித்து
நீச்சம் வியாபித்து 
சிச்சிலிகள் சுற்றிநிற்க 
மச்சம் சுமந்தேன்!!


ன்மம் ஈடேற்ற
மண்மிசை தவழ்ந்து
குன்னம் உறையும் முன்
காண்டிகை உரைத்திட
எண்ணம் செய்வித்தேன்!!



சுனையாக பொங்கிய நான்
அணைக்கட்டில் சிக்குண்டேன்!
திணைவழி ஏகிட
ஏனைய செயலுக்காய்
சுனைத்தெழுந்தேன் மதகுவழி!!


ழகு நடைபயின்று
கூழாங்கல் உருட்டி
கழனி வழி பாய்ந்து
உழவின் உயிரேற்றி
சோழகம் ஏந்திவந்தேன்!!




சிதறாது கரையடங்கி
சதங்கை ஒலியெழுப்பி
மிதமான வேகத்தில்
இதமாக ஓடிய நான்!
மேதகு தாகம் தணித்தேன்!!


ற்றே அகம் களைத்து
முற்றாய் உரகடல் இணையுமுன்
வற்றாத நினைவுகளுடன்
ஆற்றுப் படுகையாகி
நோற்புடை ஆழி கண்டேன்!!




கச்சுவை அரங்கேற்றிய
உகப்புறை சமவெளியானேன்!
சேகரமாய் எனக்குள்ளே
சாகரமாய் வழித்தடத்தை
போகணியில் போட்டுவைத்தேன்!!


லையகம் அவதரித்து
விலையில்லா பயனளித்து
இலையமுதம் புறம்கொண்டு
கலைக்கதிர் தொட்டிலென
தலைச்சங்கம் தாங்கி நின்றேன்!!




செங்குவளை மணமெடுத்து
பாங்குடனே முடிதரித்த
அங்குச மன்னவனாய்
எங்கனம் பிறப்பெனினும்
இங்கனம்தான் முடிவதுவோ?!!


நெஞ்சின் கனமது
பஞ்சுக்குவியல் ஆனது
எஞ்சிய உணர்வது
சிஞ்சிதமாய் ஒலிக்கிறது
துஞ்சாது என்னுள்ளே!!






சொல்லுக்கான பொருள்::

கோ               ------------------- மலை
சிச்சிலி         -------------- மீன்கொத்திப் பறவை
குன்னம்        ------------ கடல்
காண்டிகை    -------சூத்திரப் பொருளை சுருங்க உரைப்பது
சோழகம்       ---------- தென்றல்
நோற்புடை    ------ தவப்பயன் கொண்ட
போகணி        ---------- அகன்ற வாயுடைய குவளை
உகப்புறை     ----------- மகிழ்ச்சி தங்கிய
சிஞ்சிதம்       ----------- அணிகல ஒலி





அன்பன்
மகேந்திரன் 

Tuesday 12 March 2013

நிழற்படக் கவிதைகள் - 1


நீர்ப்பந்தல்:!!


மெல்லத் திறக்கிறேன்
என்னையே பிடுங்கித் தின்னும்
உள்ளார்ந்த உணர்வுகளை!
உள்ளங்கை தீரம்விட்டு
நீர்ப்பந்தல் போடுகிறேன்
உணர்வுகளின் வெப்பம் தணிக்க!!







வளிவழி பயணிப்போம்!!


விதியின் வழியினில்
விழுதுகள் விட்டு
பிரபஞ்சம் செல்லும்
எனக்கான பயணத்தில்
துணையாய் வருவேனென
தோள்மீது தொற்றிக்கொண்டாய்
வாழ்வது நொடியெனினும்
வீழ்வது உறுதியெனினும்
வளிவழி பயணிப்போம்!!






அன்பன்
மகேந்திரன்

Friday 8 March 2013

உப்பரிகை மிதப்பு!!







ன்றொரு நாள் 
அதிகாலை வேளையில்! 
அகண்ட வீதியின்
அக்கறை காட்சிகளின்  
அழகினை இரசித்தபடி 
அகக்கண் விரித்திருந்தேன்!!
 

விழித்து எழுந்ததும் 
வியாபித்த சோம்பலை
விரல்சொடுக்கி நீக்கியபின்!
விடியலின் அழகினில் 
வீதியின் காட்சிகாண 
உப்பரிகை நின்றிருந்தேன்!!
 

 


சாலையின் நீட்சியில் 
சாதுவான ஞமலி ஒன்று! 
சாதிக்க துடிப்பதுபோல் 
சீராக மூச்சிறைக்க 
சமதூர இடைவெளியில் 
சாகசம் காட்டியது!!
 

னிந்த சாகசம் 
ஏதேனும் அவசரமோ?
ஏந்திவந்த பொருளொன்றை 
எங்கேயும் வைத்ததுவோ?
ஏதோ தொலைத்ததுபோல் 
ஏக்கமாய் அலைவது ஏன்??!!
 
 
டந்தது மணித்துளி 
கதிரவன் கண்விழித்தான்!
களைத்தது ஞமலி 
கருங்கல் மேடொன்றில் 
கனிவாய் அமர்ந்தது 
காரணம் ஏதுமின்றி!!
 

திகைத்துப் போனேன் 
திரைவிரித்த காட்சியில்! 
நகைத்து மீண்டேன் 
நரனென்ற ஆணவத்தில் 
உவகை கொண்டேன் 
உப்பரிகை மிதப்பினில்!!


சொல்லுக்கு பொருள்:

ஞமலி: நாய் 


 
 
அன்பன் 
மகேந்திரன் 

 

Saturday 2 March 2013

நகக்கீறல் இடைவெளிகள்!!!






றந்துபோன நினைவுகளும்

துறந்துபோன உணர்வுகளும்
கறந்துவைத்த பசும்பாலாய்
நுரைபொங்கி நிற்கிறது
சிறையுண்ட எனதுளத்தில்!!
 
ந்தன் நிலையெண்ணி
சிந்தையைச் சுரண்டும் நான்
முந்தைய நாட்களுக்குள்
முகம்புதைத்துப் போகிறேன்
முடிவிலியின் அச்சத்தில்!!
 

 


ற்பனை சித்திரங்களுக்கு
தூரிகை சமைக்கையில்
கற்பூர வில்லைகளாய்
காற்றில் கரைந்துபோயின
நிகழ்கால முயற்சிகள்!!

ன்னிலையில் நிறைவுறாது
முன்னிலையின் தன்மையை
எந்நாளும் சிந்தித்தே
இந்நாளின் தண்மைதனை
வெந்நீராய் மாற்றுவதேன்?!!
 
 
ப்பிட்டு பார்த்தே 
உமிழ்நீர் விழுங்குகிறேன் 
முன்னவரின் திறமைகண்டு 
ஒவ்வாமை நோயால் 
ஓரடி பின்வைக்கிறேன்!!
 
ள்ளங்கை நெல்லியின் 
சுவையுணர தவறிட்டு 
எட்டாக் கனிக்காக 
முட்டு தேய நடக்கிறோம் 
சற்றும் சளைக்காமல்!!
 
 
ரும்பென்று நினைத்து 
இரும்பைக் கடிக்க இயலுமா?
விழிவிரித்த பாதையில் 
விரிசல் இல்லா முயற்சியுடன் 
வீறுநடை போடுவோம்!!
 
திண்டின்மீது ஏறிவிட்டு 
குன்றின்மீது  ஏறியதுபோல்
கூப்பாடு போடாது
குவலயம் சிறந்திட 
குறுஞ்செயல் ஒன்று செய்வோம்!!
 
 
ரிதான பிறப்பிதனின்
நெடுந்தூர பயணத்தை
கடந்தேறி வென்றிட
ஊசிப்போன உணர்சிகளை
உள்ளுக்குள் புதைத்துவிட்டு
நகக்கீறல் இடைவெளியில்
நன்சரித்திரம் படைத்திடுவோம்!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்