Powered By Blogger

Monday 2 May 2011

சிறப்பு!

மலரின் சிறப்பு - மனம் 
மயக்கும் மந்தகாச வாசத்தில்!

காற்றின் சிறப்பு - உவகையூட்டும்  
தென்றல் பருவத்தில்!

கடலின் சிறப்பு - ஆழிப்பேரலையோடு
அளவில்லா ஆழத்தில்!

நிலவின் சிறப்பு - தண்மையான
கதிர் பாய்ச்சும் முழுமையில்!

புவியின் சிறப்பு - ஓய்வறியா
உன்னதமான உழைப்பில்!

நட்பின் சிறப்பு - நன்னெறியோடு
நலமோங்கும்  நம்பிக்கையில்!

பண்பில் சிறப்பு - போற்றுதலின்
பொன்னான பணிவில்!

மனிதனின் சிறப்பு - சுயநலமின்றி
பண்பு சிதையாமல் பகுத்தறிவோடு
பிறரை இகழா - புறம் பேசா
போற்றத்தகுந்த குணத்தில்!


மனிதனாக இருப்போம்!
மனிதத்தின் சிறப்பு காப்போம்!


அன்பன்

ப.மகேந்திரன்

No comments:

Post a Comment