Powered By Blogger

Monday, 23 July 2012

நந்தவனங்கள் நாங்கள்!!


முகப்பரு தொலைக்க 
பூசிவந்த சாயமல்ல 
அகப்பசி தீர்க்க 
ஏற்றுக்கொண்ட சாயமிது!!
 
ள்ளிமுடித்த கூந்தலில் 
அலங்கரிக்க வந்த 
பூக்களல்ல நாங்கள் 
சொல்லத் துணியுமுன் 
கிள்ளி எறியப்பட்ட  
நந்தவனங்கள் நாங்கள்!!
 
சீருடை அணிந்து
சீரான நடைகொண்டு
புத்தகப் பையோடு
பள்ளிசெல்ல ஆசையொன்று
நெஞ்சினிலே இருந்தாலும்
விதியிங்கு எம்மை
வீதியில் தள்ளி
பிஞ்சில் கனியவிட்டது!!
 
நான்கொண்ட நிலைக்கிங்கே
காரணங்கள் ஏதென்று 
விவாதிக்க பொழுதில்லை 
தலைக்குமேல் பணியிருக்கு 
தலைவார நேரமில்லை!!
 
 
 
அன்பன்
மகேந்திரன்

Saturday, 21 July 2012

நிரல்நிறை அமுதே!!!





நிறமும் மனமும் இல்லாத
நிறைவாய் இவ்வுலகில் 
நிரல்நிறை அமுதமாய் 
நிறைந்திருக்கும் மந்திரமே!!

ச்சக பரப்பளவில்
இருவேறு வாயுக்களை
இறுக பிணைத்துவைத்த
இயற்கையின் மகவே!!



வாழ்வாங்கு வாழ்ந்திட 
வந்த மனிதனின் 
வாழ்வின் ஆதாரமாம் 
வையகத்து நித்திலமே!!

ன்வண்ணம் தவறிடினும் 
தான் ஏற்கும் வண்ணங்களை 
தனிவட்டி வண்ணங்களுடன் 
தகைவாய் அளிக்கும் பேரழகே!!
நாகரீகம் என்பதெல்லாம் 
நீ தவழும் நதிக்கரையில் தான் 
நீட்சியாய் வளர்ந்ததென 
நன் சரித்திரம் கொண்டாயே!!

திட திரவ வாயுவென 
தீர்க்கமாய் முந்நிலையில்
திரவியமென எமக்காய் 
தோன்றிட்ட தேனமுதே!!
முந்நிலையில் எந்நிலையாய்
முகமங்கே கொண்டாலும் 
முற்றிலும் தன்னிலையை 
முழுதாய்க் கொண்ட ஆரமுதே!!

வெப்பம் காற்று என 
வெளிதொடு தூண்டுதல் 
வெம்மையாய் வந்திடினும்
முந்நிலைக்குள் தன்னிலையை 
மாற்றிக்கொள்ளும் மாதவமே!!
த்துன்பம் வந்திடினும் 
எண்ணிய செயல்முடிக்க 
எடுத்துவிடு அவதாரமென 
எனக்குரைத்த கருப்பொருளே!!

ற்றதை ஏதுவாய் முடித்திடவே 
எந்நிலை மாறினாலும் 
உன்னிலை தவறாதே என 
உட்கருத்து போதித்த மறைபொருளே!!



அன்பன் 
மகேந்திரன் 

Tuesday, 10 July 2012

நாடோடி பாடவந்தேன்!!


நாடோடி பாடவந்தேன் 
நையாண்டி அடித்துவந்தேன் 
நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா 
நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!

ய்யார ஓடம் ஓட்டி
ஊர்வலந்தான் வந்திடவே
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓடக்கரை போயிருந்தேன் - தங்கமே கட்டழகி!!

டக்கரை போனபின்னே
கண்ணுமுழி பிதுங்கிப்போனேன்
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி - ஆமா
ஓடையல்ல கம்மாக்கரை - குங்குமப் பொட்டழகி!!





விச்சிருக்கும் தொண்டக்குழி
தாகம் தான் தீர்த்திடவே
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
தண்ணீர் எடுக்கப்போனேன் - தங்கமே கட்டழகி!!

கொண்டுபோன தவளப்பானை
பொங்கிவர வேணுமின்னு
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாத்து முக்குபோனேன் - குங்குமப் பொட்டழகி!!

வளப்பானை தூரதுவோ
முழுசாக நனையவில்லை
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
ஓராத்த கடந்துபோனேன் - தங்கமே கட்டழகி!!




த்து மணல் நனைக்க
ஒருசொட்டு தண்ணியில்ல
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி - ஆமா
இரண்டாமாத்த கடந்துபோனேன் - குங்குமப் பொட்டழகி!!

மூனாமாத்த பார்த்ததுமே
மூளைகூட வேர்த்துபோயி
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி - ஆமா
மூச்சடைச்சி போனதடி - தங்கமே கட்டழகி!!

த்துக்கு ஆதாரமா
அடித்தளமா அமைஞ்ச அந்த
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா
மண்ணையே காணவில்ல - குங்குமப் பொட்டழகி!!




ந்தவழி திரும்பிபோயி

இரண்டாமாத்து மண்ணெடுத்து 
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி - ஆமா
மண் கலயம் செய்யப்போனேன் - தங்கமே கட்டழகி!!

ச்சமண்ணு எடுத்துவந்து 
செஞ்சது ஓர் மூனுபானை 
ரெண்டு பானை உடைஞ்சிபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூணாம் பானை வேகவில்லை - குங்குமப் பொட்டழகி!!

வேகாத பானையில 
மூனுபடி அரிசிபோட்டேன்
ரெண்டுபடி பொக்கையடி - தங்கமே கட்டழகி - ஆமா 
மூனாம்படி வேகவில்லை - தங்கமே கட்டழகி!!
 
 
வேகாத சோற்றுக்கு 
மோர்விட்டு சாப்பிடத்தான் 
முக்குளத்தூர் சந்தையில  - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூனுபசு வாங்கிவந்தேன் - குங்குமப் பொட்டழகி!!

வாங்கிவந்து கட்டிவைச்ச 
பசுமாட்டு கதையக்கேளு
ரெண்டுமாடு மலட்டுமாடு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூணாவது ஈனவில்லை - தங்கமே கட்டழகி!!

வாங்கிவந்த பசுமாடு 
மேஞ்ச நிலம் மூனுகாடு 
ரெண்டுகாடு பொட்டல்காடு - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூணாவதில் புல்லே இல்லை - குங்குமப் பொட்டழகி!!
 
 
புல்லில்லா காட்டுக்கு 
சொந்தக்காரர் மூனுபேரு 
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி - ஆமா
மூனுபேரும் அரசியவாதி - தங்கமே கட்டழகி!!

ட்டுபோட கையூட்டா 
கொடுத்தபணம் முன்னூறு 
இருநூறு ட்டைநோட்டு - குங்குமப் பொட்டழகி - ஆமா
மூனாவது செல்லவேயில்லை - குங்குமப் பொட்டழகி!!

தேர்தலிலே நான்போட்ட 
ஓட்டதுவோ மூனு எண்ணம் 
ரெண்டுவோட்டு கள்ளவோட்டு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூனாவது குத்தவேயில்லை - தங்கமே கட்டழகி!!
 
 
ள்ளவோட்டு வாங்கிபுட்டு 
சட்டசபை போனவரோ 
சபைக்கு போன நாளோ - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மாதத்துக்கு மூனுநாளு - குங்குமப் பொட்டழகி!!

மாதத்துக்கு மூனுநாளு 
போனவரு திரும்பிவந்தார் 
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி - ஆமா
போன நாளு விடுமுறையாம் - தங்கமே கட்டழகி!!
ட்டுபோட்ட மக்களுக்கு 
செஞ்சதெல்லாம் மூனுசெயல் 
ரெண்டுசெயல் கிடந்துபோச்சி - குங்குமப் பொட்டழகி - ஆமா 
மூனாவது தொடங்கவில்லை - குங்குமப் பொட்டழகி!!

தொடங்காத செயலுக்கு 
முடிவுரைதான் தேடிவந்தேன் 
முழங்கால் வலிக்குதுன்னு - தங்கமே கட்டழகி - ஆமா 
மூச்சடக்கி படுத்துபுட்டேன் - தங்கமே கட்டழகி!!



அன்பன் 
மகேந்திரன் 



Sunday, 17 June 2012

என் தந்தை எனும் போதினிலே!!!!







வியப்பாக இருக்கிறது 
விரிந்திருக்கும் இவ்வுலகில் 
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!
 
 
ரைஞான் கயிற்விட்டு
அரைக்கால் சட்டையவிழ
ஒருகையால் பிடித்தோடிய காலமதில்!!
நண்பர்கள் குழாமுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்
சண்டையிட்ட பொழுதெல்லாம்!!


ல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில் 
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!


ருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!


டன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ 
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!


டபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!


கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!


சிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!


யதுவந்த பிள்ளைஎனினும்
வாஞ்சையோடு மார்பில் கிடத்தி
ஆத்தா என் தாயி
ஆங்கார மாரியம்மா எனத் தொடங்கி
வாய்ப்பாட்டு பாடி எனை 
வளர்ந்து வா என் மகனே 
வாசல்நின்று காத்திருக்கேன் என 
தாலாட்டுப் பாடிய தருணத்தில்!!
 
 
ப்பா என்றொரு வார்த்தையில் தான் 
எத்தனை மந்திரங்கள் 
சொல்லிக்கொண்டே இருக்கலாம் 
சொல்லத்தான் சொற்களில்லை!!
 
 
ன் விரல்பிடித்து இன்னும் 
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சுக்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!
 
 
துவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!
 
 
ப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
 
 
 
 
அன்பன்
மகேந்திரன்