Powered By Blogger

Tuesday 26 April 2011

புதிய பூமி படைத்திடு!



இளைஞனே இன்னபிற
         இன்னல்கள் இருந்தாலும்
இடைவிடா முயற்சியுடன்
        தடையிலா நடைபோடு!

மூங்கில் எனும் முடைக்குள்
        வடிவில்லா காற்று
மூச்சுமுட்ட நுழைந்தாலும்
        முன்னூறு ராகங்களே! முடிவில்!

காலங்காலமாய் கடுந்தவம்
        புரிந்து- கடையுலகம் காணவரும்
கடுகளவு துளி நீர்த்துளிதான்
        சிப்பிக்குள் முத்தாகும்!

சிந்தனையை சீர் செய்!
         சிறுமதி கைவிடு
புதுமையை புகுத்தி
          புதிய பூமி படைத்திடு!                                       

  

அன்பன்  
ப.மகேந்திரன்

No comments:

Post a Comment