Powered By Blogger

Monday 18 April 2011

பசி

வந்து இறங்கி இருந்து பார்!
சர்வேசா!
எம்மக்கள் படும் துயரத்தை!
வாழ்பவன் வாழ்கிறான்!
தேய்ப்பவன் தேய்கிறான்!
ஏனிந்த பாகுபாடு
உன் படைப்பில்!
உனக்கும் யாராவது
கையூட்டு கொடுத்தனரா!
எம்மக்களின் பசியை
பந்தையமாக்கும்- இக்கொடியவர்கள்
மாள்வதற்கு வழியில்லையா!
பசியற்று புசிக்கும்
இப்புல்லுருவிகளுக்கு புரியாது
எம்மக்கள் நிலை!
அதற்கு படியளப்பவன் உனக்குமா! புரியாது?
சட்டமொன்று இயற்றச்சொல்!
சாதகமாய் எமக்காக!
சன்ன வேகம் போதும்!
சட்டென்று செய்யச்சொல்!-பசியால்
சாகும் முன் எம்மக்களுக்கு!
சாதம் கிடைக்க செய்யச் சொல் !!


அன்பன்

மகேந்திரன்

No comments:

Post a Comment