பிடரிமயிர்கள் சிலிர்த்து
ஓடும் குதிரையை
விழிபிதுங்கப் பார்த்தேன்!
கம்பீரம் என்பதன்
பொன்னான பொருளதனை
அன்றுதான் அறிந்துகொண்டேன்!!
சதைகள் புடைத்து
முதுகை உலுப்பி
புவியின் மேற்பரப்பில்
பூகம்பம் வந்தது போல்
குளம்புகள் உரசி
விரைந்திடும் அழகை
கண்டு ரசித்திருந்தேன்!!
நாசியின் வழியே
புயலின் மறுவுருவாய்
சுவாசத்தை வெளியேற்றி
வாலின் கோணத்தை
செங்குத்தாய் நிலைப்படுத்தி
காற்றுக்கு இணையாய்
ஓடும் அழகை
கண்டு வியப்புற்றேன்!!
வலிமையின் பொருளுக்கு
வாய்மொழி உதாரணமே!
உன்பெயர் குதிரை தானா??!!
இதற்கு மேலும் பெயருண்டா?
வியப்பில் ஆழ்த்தும் உன்னை
குதிரை எனும் ஒரு பெயரால்
அடக்கிவிட முடியுமா??!!
ஒன்றனுக்கு பலபெயர் சொல்லும்
தேன் மதுரத் தமிழே!!
பாமரன் என் அறிவுக்கு
மறுபெயர் விளங்கவில்லை
வினா தொடுக்கிறேன்
விடையளிக்க ஓடிவா!!
பாமரப் பாவலனே!
என்னுயிர்க் காவலனே!
விளம்பிடுவேன் செவியேற்க
பார்வென்ற மன்னவரின்
படைதனுக்கு வலுவமைத்த
குதிரையின் பெயர்களை!!முன்னங்கால் உயர்த்தி
முன் நிற்கும் பகைவனை
முழங்கால் போடவைத்து
தாவிச் சென்று
தன் வெற்றி அறிவித்தமையால்
குதிரை என ஆயிற்றே!!உன்கொள்கை சரியல்ல
மாற்றிக்கொள்க என
தூது செல்லவேண்டி
கண்காணா நாட்டினுக்கு
பின்னங்கால் பிடரிபட
வாயுவின் மகவைப்போல்
விரைந்து ஓடியதால்
பரி என பெயரிட்டேன்!!பண்டைய காலம்தொட்டு
புனிதத்தின் அடையாளத்தை
தன்னுள் பொதிந்துவைத்து
மின்னொளி வீசும் கண்களுடன்
வெண்ணிறம் கொண்டமையால்
வன்னி என அழைத்திட்டேன்!!
புனிதத்தின் அடையாளத்தை
தன்னுள் பொதிந்துவைத்து
மின்னொளி வீசும் கண்களுடன்
வெண்ணிறம் கொண்டமையால்
வன்னி என அழைத்திட்டேன்!!
கடைந்தெடுத்த தேக்கும்
முறுக்கிவைத்த இரும்பும்
தன் வலிமை நினைத்து
தலையைக் குனியும் வண்ணம்
வலிவுடை கால்களை
பொலிவுடன் கொண்டமையால்
கந்துகம் என விளம்பினேன்!!
முறுக்கிவைத்த இரும்பும்
தன் வலிமை நினைத்து
தலையைக் குனியும் வண்ணம்
வலிவுடை கால்களை
பொலிவுடன் கொண்டமையால்
கந்துகம் என விளம்பினேன்!!
எதிர்நிற்கும் மன்னவனின்
படைபலம் இன்னவென
பகுத்தறிந்து பார்த்திட
இயலவில்லை எனினும்
பின்னோக்கிப் போகாது
மார்நிமிர்த்திப் களத்திலினிலே
புரிசமர் புரிந்ததால்
இவுளி என பெயரிட்டேன்!!
சமரோன் அழிந்தபின்னும்
சமர்புரி களம் அங்கே
சாக்காடு ஆனபின்னும்
சினம் தணியாது
சாகசம் புரிவதுபோல்
மதில் தாண்டி செல்வதால்
புரவி என ஆயிற்றே!!!ஏர் உழுதமையால்
கலிமா எனவும்
தூதுவனை தன்மேல்
தாங்கிச் சென்றமையால்
துரகம் எனவும்
பெயரிட்டு வைத்தேன்
செவிமடுத்த என்மகவே!!
அன்பன்
மகேந்திரன்
கலிமா எனவும்
தூதுவனை தன்மேல்
தாங்கிச் சென்றமையால்
துரகம் எனவும்
பெயரிட்டு வைத்தேன்
செவிமடுத்த என்மகவே!!
அன்பன்
மகேந்திரன்